கராத்தே பாணியில் அப்பாவியை தாக்கிய எஸ்.ஐ!
கே.ஏ.ஜெகதீஷ்வரி,
ஆர்டரின் பேரில் உணவு வகைகளை டோர் டெலிவரி செய்து பிழைப்பு நடத்தி வந்த வாலிபரை எஸ்.ஐ. தர்மராஜ் என்பவர் பொது மக்கள் முன்னிலையில் தாக்கினார்.
இவர் ஸ்ரீவில்லிபுத்துர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றுகிறார்.
அந்த இளைஞரை தாக்கியது மட்டுமில்லாமல் தரதரவென்று காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று பொய் வழக்கு போட்டுள்ளார்.
உணவு டெலிவரி இளைஞர் மேற்படி எஸ்.ஐ.தர்மராஜை கத்தியை காட்டி மிரட்டியதாக பொய் கேஸில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே அவருக்கு 200 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் எஸ்.ஐ.இந்த அடாவடி செயலில் ஈடுபட்டுள்ளார்.
சர்வோதய சங்கத்தில் அருகே நடந்த இந்த சம்பவத்தினை அங்கு பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் தடுக்கும் காட்சிகளும், வேடிக்கை பார்க்கும் மக்கள் ஆகிய காட்சிகளும் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.