வேலூர்... திருப்பத்தூர்.... இராணிப்பேட்டை..மாவட்டங்களில் பொங்கல் தொகுப்பு!

கு.அசோக், ஆர்.ரமேஷ்,
தமிழக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், பொது விநியோகத்திட்டதின் கீழ் நடைமுறையிலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரார்களுக்கும் கீழ் கண்ட பொருட்கள் வழங்கப்படும் நிகழ்வு துவங்கியது.
அந்த வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், ரவை 1கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், முழுநீள சுரும்பு மற்றும் துணிப்பை ஒன்று ஆகிய 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலைக்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் அரிசி பெறும் அட்டைதாரர்களாகிய முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற அரிசி அட்டைதாரர்கள், அன்னபூர்ணா அட்டைகள் மற்றும் முதியோர் ஓய்வு+திய திட்டத்தின்கீழ் அரிசி பெறும் அட்டைகள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் உள்பட மொத்தம் 3,23,647 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று 04.01.2022 முதல் வழங்கப்படுகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு பெறாத விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடைகள் மூலமாக தொடர்ந்து வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒரே நேரத்தில் வழங்கப்படும்போது நெரிசலை தவிர்க்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் சுழற்சி முறையில் தெரு வாரியாக நாளொன்றுக்கு, சுமார் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான அட்டவணையைத் தயார் செய்யப்பட்டு, அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் எவ்வித பதட்டமின்றி நெரிசல் ஏற்படாத வகையில், மேற்கண்ட தினங்களுக்குள் நியாயவிலைக் கடைகளுக்குச்சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்.04179-222111-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப.,அவர்கள் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 பொருட்கள் மற்றும் கரும்பு ஆகியவைகள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி வழங்கி துவங்கி வைத்தா£.¢
இராணிப்பேட்டைமாவட்டம்,நவல்பூர் அருகே இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த 20 வகையான பொங்கல் பரிசு மற்றும் முழு கரும்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டு இலங்கை ஏதிலிய மக்களுக்கு 20 வகையான பொருட்ங்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு கரும்பினை வழங்கினார் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 614 நியாயவிலைக்கடைகளில் உள்ள 3,37,977 குடும்ப அட்டைகளுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் வேலூர் மாவட்டத்தில் 443375 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணிகைக்கான உணவுபொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் துரை முருகன் வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. வருவாய் கோட்ட ஆட்சியர் செல்வி.விஷ்ணு பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு:செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்¢, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள்.