மதுவிலக்கு பிரிவு சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன!

கே.ஏ.ஜெகதீஷ்வரி.
சென்னை உள்பட பல பகுதிகளில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
ஏ.டி.ஜி.பி. சந்தீப் ராய் ராத்தூர் அவர்களின் அறிவுரைப்படி மதுவிலக்கு, அமலாக்கப் பிரிவும், ஆரண்யா பவுண்டேஷனுடன் இணைந்து, வனத்துறையிடம், 10000 மரக்கன்றுகள் பெற்றனர்.
அவற்றை தங்கள் அலுவலகங்கள்,சோதனைச் சாவடிகள் போலீசார் குடியிருப்புகளில் நடுவது என முடிவு செய்த S.P.பெருமாள் அவர்கள் அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்துள்ளனர்.
இத்திட்டத்தை,சென்னை பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலக வளாகத்தில் துவங்கினார்.
இது குறித்து பெருமாள் அவர்கள் கூறுகையில் பூமி வெப்பமயமாதலையும்,பருவநிலை மாவட்டத்தையும் குறைத்து தூய்மையான காற்றை பெறுவது அவசர அவசியம் அதற்கு இந்த மரக்கன்றுகள் நடும் திட்டம் பயனளிக்கும் என்று கூறினார்.