நானும் பத்திரிகையாளன் தான்! "தி டைம்ஸ் ஆப் இந்தியா" நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நானும் பத்திரிகையாளன் தான்! "தி டைம்ஸ் ஆப் இந்தியா" நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

 நானும் பத்திரிகையாளன் தான்! என்று "டைம்ஸ் ஆப் இந்தியா" ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.,

 இது பற்றின விவரம் வருமாறு,

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ( 10.10.2021 ) சென்னையில் "தி டைம்ஸ் ஆப் இந்தியா" நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் “ மெர்ச்சன்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ் " என்ற புதிய வாராந்திர பக்கத்தை வெளியிட்டு அவர் பேசினார்.

  அதில், நான் பள்ளிபருவத்திலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி முரசொலிக்கு சென்று பத்திரிகை பணிகளை செய்தவன். வெளியூர்களுக்கு பார்சல் அனுப்பும் பணிகளை செய்த அனுபவமுண்டு. ஆக நானும் பத்திரிகையாளன் தான்.

 இப்போதும் கூட அடிக்கடி முரசொலிக்கு சென்று வருகிறேன்.

 தமிழகத்தில் பெரிய பத்திரிகை என்று சொல்லக்கூடியவர்கள் தமிழக அரசை குறை கூறி செய்தி வெளியிடுகிறார்கள். சின்ன தவறை பெரியதாகவும், பெரிய அளவிளான மக்கள் திட்டங்களை சிறியதாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

  "டைம்ஸ் ஆப் இந்தியா" வின் சென்னை பதிப்பு துவக்க விழாவில் கருணாநிதி  கலந்துக் கொண்டு பேசியுள்ளதை இங்கு நினைவு கூறுகிறேன்.

   இருநூறாவது ஆண்டை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கும் "டைம்ஸ் ஆப் இந்தியா" மேலும் சிறக்கவும், " மெர்ச்சன்ட்ஸ் ஆஃப் மெட்ராஸ் " என்ற புதிய வாராந்திர பக்கம் பலருக்கு பயனுள்ளதாக அமையவும் வாழ்த்துகிறேன்.

  பத்திரிகைகள் மக்களுக்கு பயன் பெறும் கட்டுரைகளை வெளியிட வேண்டும். குறைகளை சுட்டிக்காட்டினால அவை ஏற்றுக் கொள்ளப்படும்ஸ், ஆனால் வேண்டுமென்றே தவறாக சித்தரித்தால் அது அழகல்ல. இளைஞர்கள் பத்திரிகை துறையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.

 இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி, தொழில் துறை முதன்மைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம்,இ.ஆ.ப. , தமிழ்நாடு பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரும் , முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான திரு.எஸ்.நாராயண், தி டைம்ஸ் ஆப் இந்தியா ரெசிடெண்ட் எடிட்டர் திரு.அருண் ராம், பிசினஸ் எடிட்டர் திரு. ராஜேஷ் சந்திரமௌலி, உதவி துணைத் தலைவர் மற்றும் மெட்ரோ தலைவர் திரு. மணிகண்டன் நாயர் , சோகூ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு . ஸ்ரீதர் வேம்பு, ரோக்கோ பேரி வேர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு.ரங்கநாதன் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.