பதிவுத்துறையில் திடீர் பணிநீக்கம்! நடு வீதிக்கு வந்த ஊழியர்கள்!

ம.பா.கெஜராஜ்,
தமிழக பத்திரபதிவுத்துறையில் கேமரா ஆபரேட்டர் (ஐ.பி), மற்றும் டேட்டா எண்டரி ஆபரேட்டர்(டி.இ.ஓ) ஆகிய பணிகளை மேற்கொண்டு வந்த ஊழியர்கள் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் மொத்தம் 575 பத்திர பதிவு அலுவலகங்கள் உள்ளன. அவற்றில் ஒவ்வொறு அலுவலகத்திலும் மேற்படி இரண்டு ஆபரேட்டர்கள் பணியில் இருப்பர். அப்படி கணக்கெடுத்தால் ஆயிரத்துகும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் உள்ளனர்.
டி.சி.எல்.எனப்படும் டாடா நிறுவனத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட இவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. காண்டிராக்ட் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களுக்கு மாதம் 5423 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தன.
பதிவுக்கு வரும் டாக்குமென்டுகளை ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும், கல்யாண பதிவுகள், பிறப்பு, இறப்பு பதிவுகள் என்று அனைத்தையும் கம்ப்யூட்டரில் என்டரி செய்யும் மிகவும் பொறுப்பான வேலை இவர்களுடையது தான்.
அப்படியிருக்கு ஆஸ் பர் தி இடிபார்ட்மெண்ட் இன்ஸ்ட்ரெக்ஷன் யுவர் எம்ப்ளாய்மென்ட் ஆஸ் பீன் டெரிமிநேட்டட் பிரம் கம்பெனி எபெக்டிவ் ஆன் 3ட் மார்ச் 2022 என்கிற வாசகங்களை தி சிக்மா டெக்னாலேஜிஸ் இந்தியா பி லிட் அளித்துள்ளது.
இதைக்கூட மேற்படி ஆபரேட்டர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அளித்து சுமார் 250 க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்திருக்கிறார்கள்.
காண்டிராக்ட் என்கிற பெயரில் டிசிஎல் நிறுவனத்தினர் சுளையாக பணத்தை வாரி சுருட்டிக் கொண்டு, ஊழியர்களுக்கு கிள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்படியிருக்க பத்திரப்பதிவுத்துறையின் அறிவுறுத்தலின் படி பணிநீக்கம் செய்வதாக மெயில் மூலம் உத்தரவிட்டுள்ளார்கள்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இப்படி பணி நீக்கம் செய்யப்பட்ட்டிருப்பதால் ஆபரேட்டர்கள் நடுவீதிக்கு வந்துள்ளனர்.
இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் அளிப்பதில்லையாம், மேலும் பிடித்தம் ஏதும் செய்யப்படாத நிலையில் பல ஆபரேட்டர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணிகளை செய்து வந்துக் கொண்டிருந்தனர்.
தற்போது சூழலுக்கு பாதிக்கப்பட்டடவர்கள் ஒன்றிணைந்து சட்ட சட்ட்ட ரீதியாக இதை அனுக முடிவெடுத்துள்ளனர்களாம்.