மாங்காய் மண்டி ரயில்வே மேம்பாலம்-சத்துவாச்சாரி-காங்கேயநல்லூர் பாலம் கட்ட நடவடிக்கை! சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு!

ஜி.கே.சேகரன்
மாங்காய் மண்டி ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் செழியன் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து - ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் பேட்டி - காட்பாடியில் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்த சட்டமன்ற மனுக்கள் குழுவினர் பணிகள் சரியாக நடக்காததால் அதிர்ச்சி - சட்டமன்ற மனுக்கள் குழு கூட்டத்தில் மக்கள் பிரச்சணைகள் குறித்து பேசிய போது கைபேசியில் மூழ்கி திளைத்த அதிகாரிகள்.
வேலூர் மாவட்டம்,வேலூர் மாங்காய் மண்டி ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற மக்களிடம் பெறப்பட்டிருந்த மனுக்களின் அடிப்படையில் சட்டமன்ற மனுக்கள் குழுதலைவர் செழியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன்,கிரி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அப்போது நிக்கல்சன் கால்வாய் பாலத்தை முழுவதுமாக அகற்றி மாற்றியமைத்து அதில் துவங்கி புதிய மீன் மார்கெட் வரையில் மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.
பின்னர் காட்பாடியில் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு செய்ய சென்ற சட்டமன்ற மனுக்கள் குழுவினர் அவர்கள் வருவதை அறிந்து ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஜேசிபியை நிறுத்தி பணி செய்வதை போல் பாவ்லா காட்டிய ஒப்பந்த நிறுவன மேலாளரை அழைத்து பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
பின்னர் ரங்காபுரம் பகுதியில், காங்கேயநல்லூர் சத்துவாச்சாரி பாலம் அமைக்கும் திட்டம் குறித்து வரைபடத்தை பார்வையிட்டனர்.
பின்னர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் பால் கூட்டுறவு சங்க ஆவின் நிறுவனத்தில் பால் தயாரிக்கும் முறைகள் குறித்தும் எடை அளவு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் செழியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்கள் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மக்களின் முக்கிய பிரச்சணைகள் குறித்து ஆட்சியர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அரசு அதிகாரிகள் கைபேசி வாட்ஸ் ஆப் பேஸ்புக் போன்றவைகளில் மூழ்கியிருந்தனர்.
பின்னர் சட்டமன்ற மனுக்கள் குழுவின் தலைவர் செழியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் முன்னதாக பெறப்பட்ட மனுக்களை துறை அதிகாரிகள் பரிசீலித்து என்னென்ன மனுக்கள் கோரிக்கை நிறைவேற்றபடும். 127 மனுக்களில் 65 கள ஆய்வு செய்யப்பட்டது. மனுக்கள் குழு கலந்தாலோசித்து நூற்றிற்கு தொன்னூறு சதவிகிதம் மனுக்கள் கோரிக்கைகள் செய்து தரப்படும்.
பல இடங்களில் சாலைகள் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தோம், அமைச்சார் துரைமுருகன் அவர்களின் கோரிக்கையை ஏற்று அவரது தொகுதியிலும் ஆய்வு செய்தோம்.
நாங்கள் முழு நிறைவுடன் செல்கிறோம். ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்களும், மக்கள் பிரதிநிதிகளும் வந்தனர் அவர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.
பெரும்பாலான மனுக்கள் அடிப்படை வசதிகள் கோரியே வந்துள்ளது மாங்காய் மண்டி ரயில்வே மேம்பாலம் பணிகளும் மேற்கொள்ளபடும் என கூறுகிறோம் காங்கேயநல்லூர் பாலம் அமைக்க 60 சதவிகிதம் நிலம் எடுத்துள்ளோம் காங்கேயநல்லூர் சத்துவாச்சாரி பாலமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஆவினிலும் ஆய்வு செய்தோம் பாலின் தரம் அதனை பேக்கிங்க் செய்யும் முறைகள் எடை அளவுகள் குறித்தும் ஆய்வு செய்தோம் என்று கூறினார்.