வேலை வாங்கி கொடுப்பதாக பண மோசடி செய்யும் கும்பல்! ரூ.5 கோடி சீட்டிங்!

வேலை வாங்கி கொடுப்பதாக பண மோசடி செய்யும் கும்பல்! ரூ.5 கோடி சீட்டிங்!

ஜி.சாந்தகுமார்,

 தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் சீட்டிங் சுப்பிரமணிகள் சுதந்திரமாக சுற்றித்திரிந்து பண மோசடிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

 குறுக்கு வழியில் அரசு வேலையை  பெற பணம் கொடுத்து ஏமாந்து போகும் கும்பல் இன்றளவுக்கும் இருந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது;- அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம். ஏஐசிடிஇ பெயரில் போலி நேர்முகத் தேர்வு நடத்தி வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கடந்த ஓராண்டில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் 79 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.8 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது.

 ரூ.190 கோடி சொத்துகள் மற்றும் ரூ.7.69 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பு மோசடி புகார்களில் அரசு அலுவலங்களில் உள்ள அலுவலகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது" என்றார்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.