2024 - நாடாளுமன்ற தேர்தலை துவக்கிய பா.ம.க.!

ம.பா.கெஜராஜ்,
எதிர் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் பாணிடிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் கனிசமாக அள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் பா.ம.க., அதற்கான பணிகளை தற்போதே துவக்கிவிட்டது.
2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா இருக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசியல் பாதையை பா.ஜனதா வகுத்து வருகிறது.
அக்கட்சிக்கு புதியதாக்ல பொறுப்பேற்றிருக்கும் அன்புமணி எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் வேகத்தை கூட்டியிருக்கிறார்.
அந்த வகையில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை அடக்கிவாசிக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இது சாத்தியம் என்று கூட ஒரு உதாரணத்தை சொல்கிறார்கள்.
அதாவது ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தவரை கூட்டணி விவகாரத்தில் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ளும் வழக்கத்தில் தான் இருந்தனர்.
தனித்து தேர்தல் களத்தை சந்திக்கும் ஆற்றல் ஜெ....விடம் இருந்தது. அதற்கு உதாரணம் 2014-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டலாம்.
பிரதமர் மோடி நல்ல நண்பரர் தான் எனினும் 'மோடியா? இந்த லேடியா?' என்று நேருக்கு நேர் சவால் விட்டார். அதில் இமாலய வெற்றி பெற்று சாதித்தார். அதாவது 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமையால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. கூட்டணி விசயத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கும், சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வியைத் தான் சந்தித்தார்கள். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையவில்லை. அ.தி.மு.க. 66 இடங்களையும், பா.ஜ.க. 4 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் தனது வெற்றிக்காலை ஊன்றியிருக்கிறது.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் தலைவர்களும் இல்லாத நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. தன்னை வலுப்படுத்துவதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெறவும்,2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியே ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அக்கட்சி தன் செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறது.
தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜனதாதான். இப்போதைய எதிர்க்கட்சியும் பா.ஜ.க தான் என்று பேசும் அளவுக்கு சூழ்நிலையை மாறிவருவதை மறுக்க இயலாது.
அப்படியிருக்க, அ.தி.மு.க.-பா.ஜ.க இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ஜ.க இல்லாத வலுவான கூட்டணியை உருவாக்க பா.ம.க. தலைவர் அன்புமணி முயன்று வருகிறார்.
கடந்த பத்து ஆண்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளோடும் கூட்டணி அமைத்தும், தனித்து போட்டியிட்டும் எதிர்பார்த்த அளவுக்கு பா.ம.க.வால் சாதிக்க முடியாமல் போனது.
இருப்பினும் கூட சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற போதே இருவரும் இந்த விஷயங்களை பேசியதாகவும் கூறப்படுகிறது.
கம்யூனிஸ்டு கட்சியினரும் பா.ஜ.க அல்லாத அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
ஆக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அன்புமணி ராமதாஸ் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரம் பரபரக்கிறது, ஆக பா.ம.க. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே பாடிபில்டிங் செய்ய ஆரம்பித்துள்ளது.