கர்நாடகா தேர்தல் பரபரப்பாக நகர்கிறது!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காலை 10.30 மணி நிலவரப்படி 20 வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் மணக்கோலத்தில் வந்த பெண் அவரது ஜனநாயக கடமையாற்றினார்.
மேலும் தற்போதைய நிலவரப்படி கிராமப்புறங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருவதாகவும், நகர்ப்புறங்களில் மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டதுக்கு மாறாக நகர்புறவாசிகளும் வாக்களிக்க க்யூவரிசையில் உள்ளனர்.
சித்தராமையா உள்பட அரசியல் கட்சி ஸ்டார் வேட்பாளர்கள் அவர்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.