நாற்று நடவு விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின்!

நாற்று நடவு விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின்!

ம.பா.கெஜராஜ்,

மதுரை மாவட்டம் , உசிலம்பட்டி வட்டம், பாப்பாபட்டி கிராமத்தில், உத்தமர் காந்தியடிகளின் 153 ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்ச˜ மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார்.

 மேற்படி கிராமசபைக் கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

 கிராமசபைக் கூட்டத்தை முன்னிட்டு பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

 அடுˆததாக பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், கே.நாட்டப்பட்டி கிராமத்தில், வயலில் இறங்கி நாற்று நடவு செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்களிடம் முதலமைச்சர் அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

 அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளில், எளிய மக்கள் இனிமையாக நெய்தக் கதராடைகளை இளைஞர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைவரும் வாங்கி உடுத்திப் பெருமையடைய வேண்டும்” என முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்

 மேலும் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கே.நாட்டாபட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு பயிர்கடனுக்கான காசோலைகளை வழங்கினார்.

 அடுத்ததாக,மதுரை மாநகர், மேலமாசி வீதியில் அமைந்துள்ள கதர் மற்றும் கைத்தறி விற்பனை நிலையத்தில் உள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு முதலமைச்சர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.