சர்வதேச ஜெருசலேம் தினத்தில் வன்முறை! பாலஸ்தீனர்களின் தீராத விரோதம்!

ம.பா.கெஜராஜ்,
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இரத்த பூமி என்பது சரித்திரத்தில் இடம் பெற்ற வரிகள். இங்குள்ள அமைப்புகளும் சரி மக்களும் சரி மனதளவில் ஏகப்பட்ட விரோதங்களை சுமந்து கொண்டு நாட்களை கடந்துக் கொண்டிருக்கிறார்கள். வாய்பு ஏற்படும் போதெல்லாம் நிஜ துப்பாகியில் விளையாடுவதும், ஏவுகனைகளை சுண்டிவிடுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சர்வதேச ஜெருசலேம் நாள் கொண்டாட்டத்தின் போது இஸ்ரேலியர்கள் - பாலஸ்தீனர்கள் இடையே வழக்கம் போல் மோதல்லேற்பட்டது.
பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்து 1947-ம் ஆண்டு இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இஸ்ரேல் தன்னை தனிநாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், நிலப்பரப்பு பிரிவை ஏற்க மறுத்த பாலஸ்தீன தரப்பு இஸ்ரேல் நாடு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
மேற்குகரை மற்றும் காசா முனை என இரு பகுதிகளாக இருந்த பாலஸ்தீனத்தை பாலஸ்தீன விடுதலை அமைப்பு நிர்வகித்து வந்தது.
அப்போது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கு மையமாக இருந்த ஜெருசலேமை சர்வதேச நகரமாக 1947-ல் ஐநா அறிவித்தது.
10 ஆண்டுகளுக்கு பின் ஜெருசலேமில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டும் எனவும் அங்கு வசிக்கும் நபர்கள் தாங்கள் இஸ்ரேலுடன் இணையவேண்டுமா? பாலஸ்தீனத்துடன் இணைய வேண்டுமா? என அறிவிக்கும் முடிவின் அடிப்படையில் ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணையலாம் அல்லது பாலஸ்தீனத்துடன் இணையலாம் என தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த அறிவிப்பை பாலஸ்தீன விடுதலை அமைப்பு நிராகரித்தது.
தொடர்ந்து 1948-ல் நடந்த போரில் ஜெருசலேமின் கிழக்கு பகுதியை ஜோர்டான் கைப்பற்றியது. ஜெருசலேமின் கிழக்குப்பகுதியில் பழைய நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் கிருஸ்தவ, இஸ்லாமிய, யூத புனித தளங்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக பழைய நகரில், யூத புனித தளமான டெம்பிள் மவுண்ட் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தளமான அல் அக்சா மத வழிப்பாட்டு தளமும் இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது.
இதனை தொடர்ந்து 1967-ம் ஆண்டு இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே போர் நடந்தது. இந்த போரின் போது ஜோர்டான் வசம் இருந்த கிழக்கு ஜெருசலேமின் பழைய நகர் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது.
கிழக்கு ஜெருசலேம் பழைய நகர் கைப்பற்றப்பட்டதை இதனை ஆண்டு தோறும் யூத காலண்டர் அடிப்படையில் 'ஜெருசலேம் தினம்' என்ற பெயரில் இஸ்ரேல் கொண்டாடி வருகிறது.
இந்த தினத்தில் கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள தெருக்கள் வழியாக யூத புனித தளம் அமைந்துள்ள டெம்பிள் மவுண்ட் பகுதிக்கு இஸ்ரேலியர்கள் கொண்டாட்டத்துடன் பேரணியாக வருவது வழக்கம்.
அல் அக்சா மத வழிபாட்டு தளம் அமைந்துள்ள இடத்தில் இஸ்ரேலியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவதால் இந்த பேரணியின்போது இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 'ஜெருசலேம் நாள்' நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதி வழியாக பேரணியாக சென்றனர்.
அப்போது, இஸ்ரேலியர்களுக்க்கு பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசி தடுத்து விரட்டினர்.
தொடர்ந்து இஸ்லாமிய மத வழிபாட்டு தளமான அல் அக்சா மசூதியில் சுற்றுச்சுவர் வளாகம் வழியாக பேரணி சென்றது. அங்குள்ள டெம்பிள் மவுண்ட் பகுதியில் இஸ்ரேலியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியின் போது இஸ்ரேலியர்கள் - பாலஸ்தீனர்கள் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
உள்ளூர் போலிஸ் மட்டுமின்றி இராணுவத்தினரை இஸ்ரேல் இறக்க, பாலஸ்தீனவாதிகள் அமைப்புகளின் கையிலுள்ள ஆயுதங்களை நம்பி மோதலை தூண்டினர்.
ஆனால் அவை இஸ்ரேல் படையினரால் சாமர்த்தியமாக முறியடிக்கப்பட்டது.