தெலுங்கானா சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டி!

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் போட்டி!

 உ.சசிகுமார்,

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தை கடந்து தெலுங்கானா சட்டசபை தேர்தலில்  போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவரான தொல்.திருமாவளவன் எம்.பி அறிவித்திருக்கிறார்.

  ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விசிக பல மாவட்டங்களில் பரவியுள்ளன. ஆங்காங்கே கிளை அலுவலகங்கள் உள்ளன.    அதன் தொடர்ச்சியாக விஜயவாடாவில் ஆந்திரா மாநில விசிக தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி திறந்து வைத்தார்.

 அப்படியே அவர் ஹைதராபாத்தில் பாரத் ராஷ்டிரிய சமிதி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவை சந்தித்து பேசினார் திருமாவளவன்.

 அதற்கு முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதுவாக கர்நாடகா சென்ற திருமாவளவன், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

  இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலில் விசிக போட்டியிடும் என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

 தெலுங்கானாவில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி செல்வாக்கு பெற்றது. ஓவைசி கட்சியானது தென்னிந்திய மாநிலங்களின் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுகிறது.

   தற்போது விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன். தென்னிந்திய மாநிலங்களில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான  கட்சியாக விடுதலை சிறுத்தைகளை விரிவாக்கம் செய்கிறார் என்றே பார்க்கப்படுகிறது.