குரூப் 4 அரசு தேர்வு தினத்தில் பட்டமளிப்பு விழாவா?

ஜி.சாந்தகுமார்.
வேலூர் மாவட்டம், வேலூர் நகரில் நூற்றாண்டை கடந்த கல்லூரி ஒன்று உள்ளது. சர்ச்சைகளை கக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கும் இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுவதுண்டு.
அந்த வகையில் புதுவகையான பிரச்சனை ஒன்று அங்கு எழுந்துள்ளன. அதாவது 24.7.2022 (ஞாயிற்றுக்கிழமை) பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதில் கல்லூரி கல்வியின் இயக்குநரான முனைவர் எம். ஈஸ்வரமூர்த்தி கலந்து கொள்கிறாராம், அதற்கான அழைப்பிதழ்கள் தபோது விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பட்டமளிப்பு விழா நடத்தப்படுவதாக கூறப்படும் குறிப்பிட்ட தேதியன்று,குரூப் 4 அரசு தேர்வுகள் நடைபெறுகின்றது. மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வார்களா? அல்லது அரசு தேர்வில் கலந்து கொள்வார்களா? என ஒரே குழப்பமாக இருக்கிறதாம்.
இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டமளிப்பு தேதியை மாற்ற உத்தரவிட வேண்டும் என்பது சில மாணாக்களின் அவா!