அரசாங்க பாலத்தை திறந்து வைத்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் கைது! பாலம் பாலிடிக்ஸ்:-

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
அரசாங்கம் கட்டி வரும் இரயில்வே பாலத்தை அ.தி.மு.க.செயலாளர் அதிரடியாக திறந்து வைத்து பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கட்ந்த மூன்று நாட்களாக வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்க்கொண்டார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். ஆட்சியர் கட்டிடங்கள், பேருந்து நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இவை அனைத்துமே அ.தி.மு.க.ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட பணிகளாகும்.
இந்நிலையில் முதல்வரின் நிகழ்ச்சியில் அதிமுக ஓரங்கட்டப்பட்டது. ஏனெனில் அக்கட்சிக்கு இந்த மாவட்டங்களில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் உள்ளார் அவரும் சென்னையை அடுத்த அரக்கோணத்தில் உள்ளார். ஆகவே அவரைத்த விர அரசாங்க நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினரை விருந்தினராக ழைக்க வழிவகையில்லாமல் போனது.
இந்த மனக்குறையை போக்கிக்கொள்ள முடிவெடுத்த வேலூர் மாநகர அ.தி.மு.க.செயலாளர் ராதாகிருஷ்ணன் என்கிற எஸ்.ஆர்.கே.அப்பு அதிரடியாக ஒரு வேலை செய்தார்.
அது என்னவெனில் கடந்த சில நாட்களாக பழுது நீக்கப்பட்டு வரும் காட்பாடி மேம்பாலத்தை அப்பு தன்னுடைய பரிவாரங்களுடன் சென்று ரிப்பன் கட்டி பின்னர் அந்த ரிப்பனை அவரே வெட்டி திறந்து வைத்தார். இதனால் திமுகவினர் நொந்து விட்டனர்.
இந்த பாலத்தை மையப்படுத்திதான் காட்பாடியில் பலர் பாலிடிக்ஸ் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்படி பாலத்தை நேற்று ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ஆர்.டி.ஓ.செந்தில் வேலன், என்.எச்.செயற்பொறியாளார் ஜெயக்குமார் மற்றும் வட்டாட்சியர் ஜெகன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டனர்.
அதே போன்றதொறு ஆய்வை எம்.பி. கதிர் ஆனந்த் என்பவர் மேற்கொள்வதாக இருந்த நிலையில் அவரை முந்திக்கொண்ட அப்பு பாலத்தை திரந்துவைத்து போக்குவரத்தை அனுமதித்தார்.
இதைகண்ட திமுகவைச் சேர்ந்த வன்னியராஜாவும், அவரது மனைவியும் மண்டலத் தலைவருமான புஷ்பலதாவும் அப்புவிடம் வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்த போதே பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
போதாக்குறைக்கு அவர்களை வெறுப்பேற்றும் விதமாக தேங்ஸ் அப்பு சார், இந்த பாலத்தை காட்டி பாலிடிக்ஸ் செய்துக்கொண்டிருக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் எங்களை சுத்தலில் விட்டுக் கொண்டிருக்காங்க என்று குரல் கொடுத்து சென்றனர்.
இந்த தகவல் உள்ளூர் எம். பிக்கு தெரிந்ததும் அவரும் வந்து பார்வையிட்டார்.
இது குறித்து பப்ளிக் ஒருவர் தெரிவிக்கையில் வேலூர் மாவட்டத்தில் தமிழகம் ஆந்திர எல்லையில் அமைந்துள்ள காட்பாடியில் இரு மாநிலத்தை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் புனரமைக்கும் பணிகளால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து இருந்த நிலையில் தற்போது இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்லலாம் என்று பாலத்தை ஆய்வு செய்து அதிகாரிகள் குழு அறிவித்தது.
இதனை தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருந்த நிலையில், இன்று காலை வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தனது ஆதரவாளர்கள் கட்சிக்காரர்களுடன் சென்று அந்த பாலத்தை குறுக்கில் ரிப்பன் கட்டி பாலத்தை திறந்து விடுவதாக அறிவித்தார்.
மேலும் காட்பாடி எம்எல்ஏ குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் குறித்தும் விமர்சனம் வைத்து விட்டு சென்றார்.
இதனை அடுத்து காட்பாடி போலீசார் அப்புவையும், ஜீ.ஜனார்த்தன் பகுதி செயலாளர் என்பவரையும்ர கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் நிவேதா அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
இந்த களேபரத்தை அறிந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி காட்பாடிக்கு வந்தார். ஆனால் அவர் வாயை திறக்கவில்லை .
காட்பாடி இல்லத்தில் இருந்த அதிமுக மாவட்ட செயலாளர் அப்புவை காவல்துறையினர் கைது செய்ய சென்றனர் ஆனால் அங்கு அதிமுகவினர் குவிந்ததால் அதிமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர் அப்புவை காவல்துறையினர் கைது செய்து காட்பாடி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர் இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் காட்பாடி சித்தூர் சாலையில் மறியல் செய்தனர் .
இதுகுறித்து அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு கூறுகையில் இது ஆளுங்கட்சி திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை எம்.எல்.ஏக்கள் எம்பிக்கள் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர் என கூறினார்.