பிரச்சனைக்குரிய பாலத்தை ஆட்சியர் திறந்து வைத்தார்! கனரக வாகனத்துக்கு அனுமதியில்லை!

பிரச்சனைக்குரிய பாலத்தை ஆட்சியர் திறந்து வைத்தார்! கனரக வாகனத்துக்கு அனுமதியில்லை!

ம.பா.கெஜராஜ்,

அ.தி.மு.க. மாநகர செயலாளர் அப்பு என்பவர் அரசியல் உள்நோக்கத்தோடு பிரச்சனை செய்த மேம்பாலத்தை ஆட்சியர் அவர்கள் இன்று முறைப்படி திறந்துவைத்தார்.

  வேலூர் மாவட்டம் காட்பாடியில் சீரமைக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று (04-07-2022)  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்து பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தார்.

வேலூர் மாவட்டம், கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலையில் உள்ள காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு பணி காரணமாக  மூடப்பட்டது. ரூ.1 கோடி அளவில் பணிகள் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து இன்று மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள்  தெரிவித்ததாவது.

   காட்பாடி ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணிக்காக மூடிவைக்கப்பட்டிருந்து. இன்று பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். பாலத்தின் மீது உள்ள தடுப்புகள் சேதமடைந்துள்ளது. பழுதடைந்த சுவர்களை ரயில்வேதுறை நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து அதனை சீரமைப்பார்கள். ஆனால் போக்குவரத்து நிறுத்தப்படாது. அவர்களுக்கு கட்டாயம் அதனை சீர்செய்ய அறிவுறுத்தியுள்ளோம். கனரக சரக்கு வாகனங்கள் பாலத்தின் மீது செல்ல அனுமதியில்லை.

   மேம்பாலம் பக்கவாட்டு சுவர்களை சீரமைக்க ரூ.2 கோடியில் மாற்றுபாதை அமைக்கும் பணிகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேறு மாற்றுபாதைகளிலும் செல்ல ஏற்பாடு செய்யபடும்.

மேலும், வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுபாடுகள் கடுமையாக்கப்படும். கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு தேவையான படுக்கைகள் உள்ளன. அதில் 1000 படுக்கைகள் வரையில் தயார் நிலையில் உள்ளது.  தனியார் மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதிகள் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது காட்பாடி 1-வது மண்டல குழுத்தலைவர் திருமதி.புஷ்பலதா, துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.