திருவாரூர் V.A.O.க்கள் கொந்தளிப்பு! செவி சாய்க்காத அதிகாரிகள்!

க.பாலகுரு,
வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து கிராமநிர்வாக அலுவலர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர்
அருகே நன்னிலம் அகரதிருமாளம் கிராமத்தில் பணிபுரியும் கிராமநிர்வாக அலுவலர் கௌரிசங்கரை நன்னிலம் வட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்திற்கு மாறுதல் செய்திருப்பதை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா அவர்களால் வழங்கப்பட்ட பணியிடமாறுதல் ஆணைய ரத்துசெய்து மீண்டும் அதே இடத்தில் பணி ஆணை வழங்கும்வரை மாவட்ட சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடந்தன.
அதன்படி முதல் போராட்டமாக மாவட்டத்தில் உள்ளஅனைத்து கிராமநிர்வாக அதிகாரிகளும் கருப்புபேட்ச் அணிந்து பணியாற்றினர்.
ஏற்கனவே 8ம் தேதி கோட்டாட்சியரை கண்டித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் வாயில் முன்பு அந்தந்த வட்டத்தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கடந்த-9ம் தேதி அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் ஒருநாள் விடுப்பு போராட்டம் நடத்தினர்.
அதற்கு உயர் அதிகாரிகள் செவி சாய்க்காததால், மாவட்டத்தலைவர் கதிரேசன் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான கிராம நிர்வாக அலுவலர்களுடன் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டசெயலாளர் ராஜகுமார், மாவட்டபொருளாளர் சற்குணம், ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலபொருளாளர் ராஜ்குமார் கண்டன உரையாற்றினார் மேலும் மாவட்ட துணைத்தலைவர் மார்ட்டின், மாவட்ட மகளிர் அணிசெயலாளர் ஜெயசுதா, உள்ளிட்ட கலந்து கொண்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி நீடாமங்கலம், குடவாசல், கூத்தாநல்லூர், நன்னிலம், வலங்கைமான், திருவாரூர் என மொத்தம் 400க்கும் மேற்பட்ட கிராமநிர்வாக அலுவலர்கள் கூடினர்.
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வரும் 17-ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகம்முன்பு உண்ணாவிரத போராட்டமும் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்வாயிலில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.