பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்! ஆட்சியர் நடத்தினார்!

த.நெல்சன்,
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மனித நேய குழந்தைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து வேலூர் ஊராட்சி ஒன்றியம், தெள்ளூர் ஊராட்சி, ஜமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.09.2023) குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி.அமுதா ஞானசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.மணிமொழி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் திரு.செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வின்சென்ட் ரமேஷ் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட திட்டக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மாவட்ட திட்டக் குழு தலைவர் திரு.மு.பாபு அவர்கள் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது.
பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் நடைப்பெற்றது.
அணைக்கட்டு வட்டம், மாதனூர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான 350 பாடப்புத்தகங்களையும், சட்டமன்ற உறுப்பினர் திரு. செ. வில்வநாதன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15.90 லட்சம் மதிப்பிலான 150 இருக்கைகளுடன் கூடிய மேசைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.வில்வநாதன், மாவட்ட திட்டக்குழு தலைவர் திரு.மு.பாபு, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் திரு.பாஸ்கரன், கல்லூரி முதல்வர் முனைவர்.மா.பிரேமலதா, மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.