இனி மாலையிலும் உழவர் சந்தை:- வேலூர் ஆட்சியர் தகவல்!!

ம.பா.கெஜராஜ்,
இனி மாலை நேரத்திலும் உழவர் சந்தை இயங்கும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன், இ.ஆ.ப.அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.
விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் இடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடுஅரசு உழவர்சந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
உழவர்சந்தைகளின் முக்கிய நோக்கம், விவசாயிகளுக்கு இலாபகரமான விலையை உறுதி செய்வதும், நுகர்வோர்களுக்கு தரமான பொருட்களை, நியாயமான விலையில் வழங்குவதும் ஆகும்.
தற்போது ,வேலூர் மாவட்டத்தில் வேலூர், காகிதப்பட்டறை, காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய உழவர்சந்தைகள் சிறப்பாக இயங்கிவருகிறது. ஒருநாளைக்கு சராசரியாக ரூ,25,00,000/- மதிப்புள்ள 80 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் தினந்தோறும் 400 விவசாயிகள் பயனடைகின்றனர்.
2022 - 2023 ஆம் ஆண்டுக்கான வேளாண்நிநிநிலை அறிக்கையில் உழவர்சந்தைகளில் பிற்பகலிலும் வேளாண்பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணைவெளியிடப்பட்டுள்ளது.
தற்போது உழவர்சந்தைகள் காலை 6.00 மணி முதல் நண்பகல் வரை இயங்கிவருகின்றன. அதனைத் தொடர்ந்து மாலைநேரங்களிலும் உழவர்சந்தைகள் முழுவீச்சில் செயல்படவிவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுதானியங்கள், சிறுதானியங்கள், பருப்புவகைகள், வெல்லம், காளான், நாட்டுக்கோழிமுட்டை மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
அரசு ஆணைப்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு உழவர்சந்தை வீதம், வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட் உழவர்சந்தை மட்டும் மாலை நேரத்தில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை நேர உழவர் சந்தையானது மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்படும் .
மாலை நேர உழவர் சந்தையில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,வேலுர், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண்வணிகம்) அவர்களை அணுகி தனி அடையாள அட்டைகள் பெற்றுக் கொள்ளலாம். மாலை நேர உழவர்சந்தை ஆரம்பிக்கப்பட்டவுடன் நுகர்வோர்கள் பொருட்களை வாங்கிபயன் பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும்விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநர் - 9442580451, அல்லது வேளாண்மை அலுவலர்- 9443968990 மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்- 9566594847 அணுகவும் என மாவட்டஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்.