பட்டாக்களை ரத்து செய் காலி செய்கிறோம்!

கு.அசோக்,
ஏலகிரி கிராமத்தில் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வந்த இடங்களை நீர்நிலை புறம்போக்கு எனக்கூறி அகற்ற வந்த அதிகாரிகள்! பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தில் ஏரி அமைந்துள்ளது அதனைச் சுற்றி 48 குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருவாய் துறையினர் சார்பில் ஏரி பகுதியிலேயே உள்ள சில சுமார் நூறு குடும்பங்களுக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கியதாகவும் தற்போது 48 குடும்பங்களுக்கு பட்டா வழங்காததன் காரணமாக நீர்நிலை புறம்போக்கு எனக்கூறி வருவாய் துறையினர் அகற்ற முற்படுகின்றனர்.
இதன் காரணமாக ஏரியின் மொத்த பரப்பளவை அளந்து விட்டு மேலும் முறைகேடாக பட்டா வருவாய்த் துறையின் சார்பில் கொடுக்கப்பட்ட அனைத்து பட்டாக்களையும் ரத்து செய்த பின்பு நாங்களும் காலி செய்து கொள்கிறோம் எனக் கூறி அதிகாரிகளுடன் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.