யாசகம் பெற்ற பணத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சன்னியாசி!

ஜே.அருண்ஹென்றிக்ஸ்,
பலரிடம் யாசகம் பெற்ற பணத்தில் ஒரு பகுதியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் ஒரு சன்னியாசி.
பக்தர்களிடம் யாசகம் பெற் உபவர் பூல்பாண்டியன், இவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் பணத்தை வழங்கினார்.
அதைப் பெற்றுக் கொண்ட யாசகர் பாண்டியனை கலெக்டர் கிராந்திகுமார் பாடி பாராட்டினார்.
இது குறித்து யாசகரான பூல்பாண்டியன் கூகையில், மும்பை செம்பூரில் வசித்து வந்த நான் கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, யாசகம் பெற்று பிழைப்பு நடத்த தொடங்கினேன்.
இந்த யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை நான் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இதனை எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடி அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உபகரணங்கள் வாங்கிக்கொள்ள நிதி உதவியாக அளித்தேன்.
இதுவரை 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்துள்ளேன்.
மேலும் ரூ.58 லட்சம் வரை நன்கொடையாகவும், பொது நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளேன். இதில் தான் எனக்கு பெரும் நிம்மதி உள்ளது என்றார்.
நோட் திஸ் பாயிண்ட் மிஸ்டர்ஸ் பொலிடிசியன்ஸ்.