முறைகேடே உன் பெயர் தான் திருவள்ளூவர் பல்கலைகழகமா?

முறைகேடே உன் பெயர் தான் திருவள்ளூவர் பல்கலைகழகமா?

ஜி.கே.சேகரன்,

 முறைகேடே உன் பெயர் தான் திருவள்ளூவர் பல்கலைகழகமா? என்று கேட்கக்கூடிய அளவுக்கு அங்கு பிரச்சனைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

 அந்த வகையில் தற்போது எழுந்துள்ள பிரச்சனையை பற்றி பார்ப்போம்.

திருவள்ளூவர் பல்கலைகழகத்தின்  தேர்வு எழுதிய எம்.எஸ்.சி கணித மாணவர்கள் அனைவரும் தேர்வு கட்டணம் செலுத்தியும் செலுத்தவில்லை என தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்ததால் மீண்டும் குழப்பம் தொடர் குழப்பத்தில் சிக்கி தவிக்கிறது மேற்படி பல்கலைக்கழகம்.

 வேலூர் மாவட்டம், சேர்க்காட்டில் தமிழக அரசின் திருவள்ளூவர் பல்க்லைக்கழகம் செயல்பட்டு வருகிறது, இதன் கீழ் திருவண்ணாமலை,வேலூர்,  இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

  இந்த பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் பல குளறுகபடிகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.

  ஏற்கனவே தேர்வு எழுதிய 3600 மாணவர்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் போடப்பட்டு முடிவுகள் வந்ததால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

 மேலும் பல மாணவர்களின் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளன.

 இந்த நிலையில் வேலூர் ஊரிசு கல்லூரியில் எம்.எஸ்.சி கணித மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது எம்.எஸ்.சி கணித மாணவர்கள் ஒருவர் கூட கட்டணம் செலுத்தவில்லை என தேர்வு முடிவு காட்டியது.

   பல்கலைகழகத்திற்கு மாணவர்களிடம் வசூலித்த தொகையை கல்லூரி செலுத்துவிட்டது, ஆனால் கல்லூரி செலுத்திய தொகையை பல்கலைக்கழகம் கண்டுகொள்ளாமல் முடிவுகளை வெளியிட்டுள்ளதால் எம்.எஸ்.சி கணித மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இந்த பல்கலைக்கழகம் தொடர்ந்து மாணவர்கள் பாதிப்படையும் வகையில் பிரச்சணையை ஏற்படுத்தி வருகிறது எனவே இப்பல்கலைகழக மாணவர்கள் எதாவது ஒரு வகையில் பாதிக்கபடுகின்றனர் எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு தனி அதிகாரியை நியமித்து குளறுபடிகளை தடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.