தொழிலாளர்களை நசுக்கும் வகையில் அரசுகள் செயல்படுகிறது! முன்னாள் நீதிபதி பேச்சு!

ஜி.கே.சேகரன்,
மத்திய அரசு தொழிலாளர் நல சட்டங்களை சுருக்கி அதனை திருத்துவதாக சொல்வதால் தொழிலாளர்களுக்கு தான் பாதிப்பு. தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டத்திற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 9 பேர் கொண்ட நீதிபதிகள் பென்சிற்கு மாற்றப்பட்டு 28 ஆண்டுகளாகியும் தீர்ப்பு வழங்கப்படவில்லை ஆனால் தற்போது தீர்ப்பு வந்தால் அது தொழிலாளர்களுக்கு எதிரானதாக அமையும் முன்னாள் நீதிபதி சந்துரு வேலூரில் பேச்சு.
வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள நகர அரங்கில் சி.எம்.சி மருத்துவமனையின் நிறுவனர் ஐடா ஸ்கட்டர் 153 ஆவது பிறந்த நாள் விழா சி.எம்.சி மருத்துவமனையின் பணியாளர்கள் சங்க தலைவர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நீதிபதி சந்துரு கலந்துகொண்டார் இவ்விழாவில் திரளான தொழிலாளர்களும் பணியாளர்களும் பங்கேற்றனர்.
இதில் முன்னாள் நீதிபதி சந்துரு பேசுகையில், தொழிலாளர்கள் உரிமைகள் பெற தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்குகளில் சந்தித்து வருகிறோம். தொழிலாளர் சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பினை பெற 9 பேர் கொண்ட நீதிபதிகளின் பென்ஞ்சுக்கு மாற்றப்பட்டு 28 ஆண்டுகளாகியும் அதனை தீர்வு காண முன் வரவில்லை.
மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களை திருத்துவதாக கூறி சுருக்கியது. தொழிலாளர்களுக்கு பாதிப்பு 28 ஆண்டுகளாக வழங்கப்படாத தீர்ப்பு இப்போது வந்தால் அது தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையுமா என்றே சொல்ல முடியாத நிலை.
மத்திய அரசும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும் நசுக்கும் வகையில் செயல்படுகிறது என தொழிலாளர்கள் நீங்கள் கொள்கை பிடிப்புடன் இருக்க வேண்டும். சேவை நிறுவனங்களுக்கு தொழிலாளர் தகராறு சட்டம் பொருந்தாத என்பதை எல்லாம் மாற்றியமைத்து தீர்ப்பினை பெற்றோம். ஆகவே நீங்கள் உங்க்ளின் உரிமைகளை பாதுகாக்கும் கொள்கையுடன் இருக்க வேண்டுமென பேசினார்.