எங்கள் பள்ளி மிளிரும்! வேலூர் ஆட்சியரின் பரபரப்புத்தகவல்கள்!

எங்கள் பள்ளி மிளிரும்! வேலூர் ஆட்சியரின் பரபரப்புத்தகவல்கள்!

ம.பா.கெஜராஜ்.

  பள்ளி  எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தை கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

          வேலூர் மாவட்டத்தில் மாணாக்கர்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தை கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள்  இன்று (07.09.2023) தொடங்கி வைத்தார்.

          அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்  வகையில்  எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி  திட்டத்தை  தமிழ்நாடு கல்வித் துறையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக இப்பள்ளியல் மரக்கன்றுகளை நடவு செய்தார். மேலும்மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் தூய்மையான  பள்ளி  என்ற உறுதிமொழியினை அனைத்து மாணவ-மாணவியர்களும் எடுத்து  கொண்டனர்.

          தமிழக அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  மாநிலம் முழுவதும் உள்ள 37574 அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்தச் சூழலில், பள்ளிக்குச் செல்லும் போது, வகுப்பறைகளில் அல்லது வளாகத்தில் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாற்காலிகள், மேசைகள், பெஞ்சுகள், மின்-கழிவுகள், மரம் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படாமல் அல்லது உடைந்து கிடப்பது கண்டறியப்பட்டது.

   கிளைகள், பழைய உபகரணங்கள், கட்டுமான குப்பைகள் மற்றும் பிற பொருட்கள் போன்றவை, அவை செயல்படாதவை அல்லது பயன்பாட்டில் இல்லை. பள்ளிகளில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுத்தமான கழிவறைகள் தொடர்பாக அனைத்து குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் திட்டத்தை "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" உருவாக்கப்பட்டுள்ளது. 

          இத்திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் இணைந்து திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலில் மதிப்புகளை புகுத்துவதற்கு மற்றும் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

  இத்திட்டத்தில் தனிப்பட்ட சுகாதரம், பள்ளிகளில் பசுமையை அதிகரித்தல், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கழிவு மேலாண்மை நடைமுறைகள், பள்ளி காய்கறி தோட்டம், மறுசுழற்சி மற்றும் மறுசுழற்சியின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் இல்லாத வளாகம் மற்றும் மாற்று வழிகளை நோக்கி ஊக்குவித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

          பள்ளிகளில் இத்திட்டத்தை சீராக செயல்படுத்த, மாவட்ட அளவிலான குழு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையிலும்வட்டார அளவிலான குழு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலும்,     பள்ளி அளவிலான குழுவில் தலைமை ஆசிரியர் தலைவராக இருப்பார்கள்.

          பள்ளி அளவிலான குழுவில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தை வலுப்படுத்துதல், சுத்தமான பள்ளி வளாகத் திட்டத்தை உருவாக்குதல், தூய்மையான வளாகத் திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கான பாதுபாப்பான குடிநீர் கிடைக்கச் செய்தல், பள்ளி வளாகத்தில் கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேற்கொள்ளுதல், பள்ளியில் காய்கறித் தோட்டத்தை உருவாக்குதல் மற்றும் பயிரிடப்படும் காய்கறிகள்/ பழங்கள் மதிய உணவுத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான நடடிக்கைகளை நடத்துவதற்கு ஒரு குழுவை அமைத்தல், ஒவ்வொரு அணியிலும் மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இருக்க வேண்டும்.

          மாணவர்களின் துணை குழுக்களில்  பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், துய்மையான வகுப்பறைகள் மற்றும் பராமரிப்பு, தூய்மையான பள்ளி வளாகம்கழிவு மேலாண்மை,     பள்ளி  காய்கறி தோட்டம் அமைத்தல் போன்ற ஐந்து துணைக் குழுக்களின் பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த 5 மாணவர்கள் கொண்ட துணைக் குழு அமைக்கப்பட வேண்டும். 

          அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" என்ற விருது மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும். இதில் சிறப்பாகப் பங்களிக்கும் மாணவர்களுக்கு எக்கோ ஸ்டார் விருது, வழிகாட்டி ஆசிரியருக்கு, "சிறந்த சுற்றுச்சூழல் வழிகாட்டி ஆசிரியர் விருது" மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யும் என்.ஜி.ஓ.க்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது வழங்கப்படும்.

          இதன் முக்கிய நோக்கம் பாதுகாப்பான குடிநீர்,சுத்தமான கழிவறைகள்,தனிமனித சுகாதாரம், சுத்தமான வகுப்பறை ,சுத்தமான பள்ளி வளாகம்,கழிவு மேலாண்மை,பள்ளி காய்கறி தோட்டம், மரம் நடுதல், கழிவுகளை மறுசுழற்றி செய்தல், பிளாஸ்டிக் இல்லாத வளாகம் ஆகும்.

'எங்கள் பள்ளி - மிளிரும் பள்ளி' வளாகங்களில் பசுமையை அதிகரிக்கவும், மதிய உணவுத் திட்டத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பள்ளி காய்கறித் தோட்டம் அமைப்பதற்கும் வழி வகுக்கும் என்று கருதப்படுகிறது. பள்ளிகளில் தூய்மை, சுகாதாரம் இவற்றை கடைபிடிக்க வேண்டும். மேலும் சுகாதாரத்தைப் பேணுவதற்கும் பயிற்சி செய்வதற்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

          இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்  திரு.ஜே. எல். ஈஸ்வரப்பன்ஒன்றிய குழு தலைவர்  திருமதி.திவ்யா கமல் பிரசாத், மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி  மணிமொழிஒன்றிய குழு துணை தலைவர்  திரு. கஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்  திருமதி  தேவி சிவா, ஒன்றிய குழு உறுப்பினர்  திரு. கே.ஜெ. விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி .செல்வி ரவி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. கோட்டீஸ்வரன, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர்  திருமதி.சாந்தி, கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.அ.கோபிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்