விளையாட்டு போட்டிகளுக்கு அனுமதி இலவசமாம்!

ஜி.கே.சேகரன்,
இப்போதெல்லாம் விளையாட்டு போட்டிகள் நடத்துகிறோம் என்கிற பெயரில் அனுமதி உள்ளிட்ட பலவக்களில் பணம் கறப்பதை அறிவோம். இந்நிலையில் கிராமப்புற மக்களிடம் விளையாட்டை ஊக்குவிக்க 10 மாவட்டங்கள் பங்கு பெறும் கிராமிய விளையாட்டு போட்டி ராணிப்பேட்டையில் 10 ஆம் தேதி நடக்கிறது. அதற்கான அனுமதி இலவசம் அனைவரும் கலந்துகொள்ள ஈஷா யோகா அழைப்பு வேலூரில் ஒருங்கிணைப்பாளர் பேட்டி.
ஈஷா யோகா சார்பில் ஈஷா கிராமோற்சவம் என்னும் கிராமிய விளையாட்டு திருவிழா குறித்து ஈஷா கிராம உற்சவம் குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள வன்னிவேடு கிராமத்தில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் பத்தாம் தேதி செங்கல்பட்டு திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை,, வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இதில் ஆண்களுக்கு வாலிபால் போட்டியும், பெண்களுக்கு த்ரோபால் போட்டியும் மற்றும் இருபாலருக்கும் ஆன கபடி போட்டிகளும் நடைபெற உள்ளது. வாலிபால் போட்டியில் மொத்தம் 28 அணிகளும் திரோபால் போட்டியில் 10 அணிகளும் கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஆறு அணியும் பெண்கள் பிரிவில் ஆறு அணியும் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டிகள் நமது நாட்டின் முதுகெலும்பாக விளங்கும், கிராமப்புற இளைஞர்கள் மாணவர்கள் நல்ல உடல் மன ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென கிராமப்புற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி கோவையில் செப்டம்பர் 23ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் அதில் வெற்றி பெறுபவர்களுக்கு 55 லட்சம் வரை பரிசுத் தொகைகள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளது என கூறினார்.