விருட்டெனெ ஏறிய விலைவாசி:- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கம்யூனிஸ்டுகள் போராட்டம்!

விருட்டெனெ ஏறிய விலைவாசி:- வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் கம்யூனிஸ்டுகள் போராட்டம்!

 கு.அசோக்,

 இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது.

 திருப்பத்தூர் மாவட்டம்

  திருப்பத்தூர் ஸ்டேட் பேங்க் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி  மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமையில்  மறியல் போராட்டம் நடைபெற்றது.

  முக்கிய கோரிக்கைகளாக விஷம் போல ஏறும் விலைவாசி உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும், பொதுத் துறைகளை தனியார் மையமாக கூடாது, பாஜக சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

  ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியும், இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்கதாக கூறிய வாக்குறுதி உடனடியாக நிறைவேற்று என பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   அப்போது திடீரென திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் சாலையில்

50க்கும் மேற்பட்டோர்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

  அதே போல் வாணியம்பாடி ரயில் நிலையம் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம்  நடைபெற்றது. தலைமை இந்துமதி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் மணிமாறன் மாவட்ட குழு உறுப்பினர். இதில் விண்ணை தொடும் விலைவாசியை குறைத்திடவும் வேலை வாய்ப்பை உருவாக்கி விடவும் 100 நாள் வேலை பாதுகாத்திடவும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாத்திடவும் போன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தேசம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் 50க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் பொழுது காவல்துறையினர் முன்பாகவே கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டம்

காட்பாடியில் மத்திய அரசைக்கண்டித்தும் பெட் ரோல் டீசல் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயற்சி கைது செய்யப்பட்டனர்.

  வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.  இதில் விலைவாசியை குறைத்திடவும் வேலை வாய்ப்பை உருவாக்கி விடவும் 100 நாள் வேலை பாதுகாத்திடவும், நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாத்திடவும் போன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தனர்.

இதில் 50க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் பொழுது காவல்துறையினர் முன்பாகவே கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்

 இங்கு தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பில்விலைவாசி உயர்வை கண்டித்தும் வேலையின்மைக்கு எதிராகவும் இதற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஒன்றிய பிஜேபி அரசு வேலை உண்மையை நீக்கி அனைவருக்கும் முறையான வேலை வழங்குவோம் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை உடனடியாக குறைத்திட வலியுறுத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட முயற்சித்ததால் ராணிப்பேட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர்.