மும்முரமாக நடத்தப்படும் பாதுகாப்பு இணையவழி நிகழ்ச்சிகள்!

மும்முரமாக நடத்தப்படும் பாதுகாப்பு இணையவழி நிகழ்ச்சிகள்!

 ம.பா.கெஜராஜ்,

இராணிப்பேட்டை மாவட்டத்தில் " பாதுகாப்பாக இணையவழியை  பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம்" திமிரி  அரசினர் மகளிர்  மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது...

   தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் முனைவர்.திரு.சி.சைலேந்திர பாபு இ.கா.ப.,  அவர்களின் உத்தரவின்படி, காவல் துறை தலைவர் (வடக்கு மண்டலம்) திரு.கண்ணன் இ.கா.ப., வர்களின் அறிவுரைப்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.டிவி.கிரண் ஸ்ருதி இ.கா.ப அவர்கள் வழிகாட்டுதலின்படி, முத்துக் கருப்பன். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், கோட்டீஸ்வரன், டி.எஸ்.பி.தலைமையில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

   சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  நிதி நிறுவன மோசடி,போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி,போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம் உதவி எண்:1930 , www.cybercrime.gov.in இணையதள முகவரி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

   பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சரியான தொடுதல்  மற்றும் தவறான தொடுதல் பற்றியும் அவ்வாறு நடைப்பெற்றால் யாரை அணுகவேண்டும் என்ற விவரமும் .அதற்காக எந்த எந்த அலுவலகங்கள் மற்றும் குழுக்கள்செயல்படுகின்றன என்ற விவரமும் மற்றும் அந்த சமயத்தில் அணுக வேண்டிய உதவி இலவச உதவி எண் 1098 / 181 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

   மேலும் இந்நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் ராஜா குமார்,  தியாகராஜன், விஜயலட்சுமி சிறப்பு உதவி ஆய்வாளர் ,  திருமதி. கவிதா சிறப்பு உதவி ஆய்வாளர், இராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையம் உள்ளிட்டோரும்,  மேலும் இந்நிகழ்ச்சியில் 350 மாணவிகள் மற்றும் 15 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.