சிறப்பாக செயல்படும் போலிசார் கவுரவிக்கப்படுவார்கள் வேலூர் டிஐஜி பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றத்தடுப்பு பற்றின ஆய்வு கூட்டம் வேலூர் எஸ்.பி. நேற்று நடந்தது. கூட் டத்துக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. திரு.எம். எஸ்.முத்துசாமி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (வேலூர்), ஆல்பர்ட்ஜான் (திருப்பத்தூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள்மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கூட்டத்தில் டி.ஐ.ஜி. முத்து சாமி குறிப்பிடுகையில், வேலூர் சரகத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறு வதை கட்டுப்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறும் கிராமங்கள் பட்டியலை தயார் செய்து, அந்தகிராமத்தில் தலைவர், ஆசிரியர்கள், முக்கிய பிரமுகா களை ஒருங்கிணைத்து அவர்களுடன் போலீசார் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கிராமங்களில் குழந்தை திருமணம் நடைபெறாது என்று அறிவிப்பு பலகை வைக்கவேண்டும். போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களை தப்பிக்க விடாமல்கோர்ட்டில் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
அவ்வாறு பணியாற்றும் போலீசார் கவுரவிக்கப்படுவார்கள். வன்கொடுமை, தீண்டாமை வழக்குகளில் விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு சென்று போலீசார் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
கோர்ட்டில் பிறப்பிக்கப்படும் வாரண்டுகளுக்கு சம்பந்தப்பட்டவர்களை ஆஜராக நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து வழக்குகளில் அக்கறை செலுத்தி, மீண்டும் விபத்துகள் நடக்காத வகையில் அறிவிப்பு பலகைவைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகத்துடன் காவல் துறை இணைந்து செயல் பட வேண்டும் என்று அவர் பேசினார்.
மேலும், பாகாய காவல் நிலைய பதிவு செய்யப்பட்ட நகை திருட்டு வழக்கில் 90 பவுன் நகைகளை மீட்ட போலீசாருக்கு தனது சொந்த பணம் ரூ.10 ஆயிரம் வழங்கி பாராட்டினார். போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண் டனை பெற்றுக் கொடுத்த ஆரணி துணை போலீஸ் சூப் பிரண்டு ரவிச்சந்திரனையும் பாராட்டினார்.
முன்னதாக வேலூர் சரகத்துக்குட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை ஆகிய மாவட்டங் களில் போக்சோ, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 100 போலீசா ருக்கு டி.ஐ.ஜி.முத்துசாமி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
மேலும், சிறப்பாக பணிபுரிந்த இராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினர் பானாவரம் வட்ட ஆய்வாளர் திரு. லட்சுமிபதி, நெமிலி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிரஞ்சீவிலு, சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சஞ்சீவிராயன் , சிப்காட் காவல் நிலைய தலைமை காவலர் திரு. பரத்குமார், நெமிலி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.தனசேகர் மற்றும் வாலாஜா காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. ஜாவித்கான் ஆகியோருக்கு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்கள்.
காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு குறைதீர்வு நாள்
வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். எம். எஸ்.முத்துசாமி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் வேலூர் சரகத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு குறைதீர்வு நாள் நேற்று 12.10.2023-ம் தேதி நடைபெற்றது.
வேலூர் சரகம் (வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை) மாவட்டங்களிலிருந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சுமார் 70 நபர்கள் தங்கள் கோரிக்கையை மனுக்களாக வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் அவர்களிடம் சமர்பித்தனர்.
பெறப்பட்ட 70 கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் தெரிவித்து கொண்டார். இந்த நிகழ்வின் போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. என். மணிவண்ணன் இ.கா.ப., திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான் இ.கா.ப., இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.டி.வி கிரண் ஸ்ருதி இ.கா.ப., ஆகியோர் உடன் இருந்தனர்.