அரசு வாகனங்கள் ஏலம்!

க.பாலகுரு,
மாவட்ட காவல் துறையில் கழிவினம் செய்ய்யபட்ட்ட காவல் வாகனங்க்கள் பொது ஏலம் விடப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
திருவாரூர் மாவட்ட காவல்துறையில் கழிவினம் செய்யப்பட்ட இருசக்கரம்
மற்றும் நான்கு சக்கரம் (டாடா சுமோக்கள், கார், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல அரசு வாகனங்களின் பொது ஏலம் எதிர் வரும் 27.01.2023 (வெள்ள்ளி) அன்று காலை 10.00 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்
நடைபெறவுள்ளது.
காவல் வாகனங்களை பொது ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் 27.01.2023 அன்று காலை திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைக்கு வருகைதந்து ஏலத்தில் கலந்துகொண்டு காவல் வாகனங்களை ஏலத்தில்
எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ்குமார்,இ.கா.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்