பாதுகாப்பு இல்லாமல் சைக்கிள் போட்டியா:- கடுப்பான கலெக்டர்!

கு.அசோக்,
ஜோலார்பேட்டை நடந்த பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டியில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என மாவட்ட விளையாட்டு அலுவலரை திட்டிய மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டியை மாவட்ட நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருப்பத்தூர் மாவட்டத்துகுட்பட்ட பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்திருந்த மாணவுகளின் வயது விகிதத்தின் அடிப்படையில் 20 கிலோ மீட்டர் வரையிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் உமா சங்கருக்கு செமையாக டோஸ்விட்டார்.
சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு எந்த ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இன்றி போட்டி நடைபெறுகிறது.
முறையாக போலீசாருக்கு தகவல் சொல்லி கூடுதல் போலீசை பணி அமர்த்திருக்க வேண்டும், மேலும் அவர்கள் செல்லும் சாலையில் வாகனங்களில் சென்ற வண்ணம் உள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் யார் காரணம் என சவுண்டு விட்டார்.
இருந்த போதும், கொடி அசைத்து சைக்கிள் போட்டியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.