தள்ளு தள்ளு தள்ளு! அரசு புதிய பேருந்தின் கதி இதுதான்!

ஜி.கே.சேகரன்,
சமீபத்தில் புதியதாக மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்ட பேருந்தை பயணிகள் தள்ளி இயக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.
திருப்பத்தூர் பனிமனையிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இங்கிருந்து 250-க்கும் மேற்பட்ட பேருந்துகள் அனுப்பப்படுகிறது. சமீபத்தில் புதியதாக 20 பேருந்துகள் விடப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரிக்கு புதிய பேருந்து இயக்கப்படுகிறது. அப்படியிருக்க நேற்று தருமபுரி செல்லும் பேருந்து ஸ்டார்ட் ஆகவில்லை. அதனால் பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி தள்ள சொல்லியதால் பயணிகள் முகம் சுழித்து சென்றனர்.
அரசு பேருந்து சரியாக பராமரிக்க தவறியதால் தான் இந்த நிலை உள்ளது என்றும் இதே போன்று தொடர்ந்து இருக்குமானால் தனியார் பேருந்தில் தான் செல்ல நேரிடும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.