கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதி மொழி!

உ.சசிக்குமார்,
முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் முதியோர்களுக்கான தேவை மற்றும் ஆலோசனைகளை வழங்க ஏற்படுத்தப்பட்டுள்ள 14567 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை ஆட்சியர் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன், மேலாளர் (பொது) நீதியியல் திரு.பழனி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் செல்வி வினோலியா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.