ஊர்க்காவல் படை தளபதி மீது துன்புறுத்தல் புகார்!

ஊர்க்காவல் படை தளபதி மீது துன்புறுத்தல் புகார்!

ஜி.கே.சேகரன்,

  ஆம்பூர் அருகே  ஊர்க்காவல் படை பிரிவு தளபதி பணி நேரத்தின் போது துன்புறுத்துவதாக கூறி அதே படையைச் சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு  தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னப்பள்ளிகுப்பம், போயர் காலனி பகுதியை சேர்ந்தவர் யுகேந்திரன், இவர் ஊர்க்காவல் படை பிரிவில் கடந்த சில மாதங்களாக ஊர்க்காவல் படை ஆம்பூர்  படைப்பிரிவு தளபதி  பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கதிரேசன் தலைமையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த சில நாட்களாக யுகேந்திரனை ஊர் காவல் படை பிரிவு தளபதி கதிரேசன் பணி நேரத்தின் போது கடைக்குச் சென்று டீ உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கி வர சொல்வதும் குறிப்பாக இரவு நேரத்தில் அதிகமான பணி சுமையை இவர் மீது வைத்து வந்ததாகவும் யுகேந்திரன் தரப்பில் கூறப்படுகிறது.

  அதில் கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமிக்காக சிறப்பு பாதுகாப்பு பணிக்காக யுகேந்திரன் செல்லாததாலும், காக்கி சீருடையில் படை தளபதிக்கு தெரிவிக்காமல் வாகன சோதனையில் ஈடுபடுவதாகவும் இதற்காக விளக்கம் கேட்டு அவரை பணியிடை நீக்கம் செய்து ஊர்க்காவல் படைபிரிவு ஆய்வாளர் குறிப்பாணை( மெமோ) அனுப்பியுள்ளார்.

 இதனால் அதிர்ச்சியடைந்த யுகேந்திரன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

 இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டு, பின்னர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் சம்பவம் குறித்து உமராபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 பணி நேரத்தின் போது ஊர்க்காவல் படை பிரிவு தளபதி துன்புறுத்துவதாக கூறி ஊர்க்காவல் படை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.