திறப்பு விழாவிற்கு வர விடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர்! முதலமைச்சர் பேச்சு! அமைச்சர்கள் எ.வ.வேலு - மா.சுப்பிரமணிக்கு பாராட்டு மழை!

ம.பா.கெஜராஜ்,
கிங் ஆய்வக வளாகத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திறப்பு விழாவிற்கு வர விடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர் என்று பேசியதுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு - மா.சுப்பிரமணிக்கு பாராட்டு மழை பொய்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.
இங்கு இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6 மணியளவில் திறந்து வைத்தார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- மறைந்த பின்னும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி.
15 மாதங்களில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஒரு செங்கல் கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டவில்லை. கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு உயர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
ஏழை எளிய மக்களின் மருத்துவராக இருந்தவர் கருணாநிதி. திறப்பு விழாவிற்கு வர விடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர். மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. நாட்டிற்கே பல முன்மாதிரியான திட்டங்களை திமுக கொண்டு வந்துள்ளது. எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
மக்களை தேடி மருத்துவம் மூலம் 1.46 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இருசக்கர அவசர ஊர்தி, பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்தி என பல்வேறு திட்டங்கள் உள்ளது. கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்.
அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியனுக்கு பாராட்டு.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இதனை பிரமாண்டமாக, மிக பிரமாண்டமாக கட்டித்தந்துள்ள அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். உலகத்தரத்துடனும், மிக பிரமாண்டமாகவும் இந்த மருத்துவமனையை எழுப்ப வாரந்தோறும் இங்கு ஆய்வு நடத்தி, பார்த்து.. பார்த்து செதுக்கினார்கள் என்பார்களே, அதுபோல திட்டமிட்டு செய்து மக்கள் நல்வாழ்வு கோட்டையாக எழுப்பி காட்டியிருக்கிறார்.
அமைச்சர் எ.வ.வேலு. ஏவாமலேயே பணியாற்றக்கூடியவர் எ.வ.வேலு என்று கருணாநிதியாலேயே பாராட்டப்பட்டவர் அவர். செயல்படுவதில் மாரத்தான் மந்திரி என்றால் அது மா.சுப்பிரமணியன் தான். இந்த 2 அமைச்சர்களும் சேர்ந்து கருணாநிதி புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், கட்டுமான அதிகாரிகள்-பணியாளர் கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
வேலூரில் தங்கும் விடுதி
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இன்னும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி. போன்ற பல்வேறு மருத்துவமனைகள் இயங்கி கொண்டு இருக்கின்றன. அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் வருகிறார்கள். வடமாநிலத்தில் இருந்தும் வருகிறார்கள்.
இவர்களை பொருளாதார ரீதியாக அதிக வசதியில்லாத சிலரும் சிகிச்சைக்கு வருகின்ற காரணத்தினால் அவர்களோடு வரக்கூ டியவர்கள் வேலூரில் தங்குவதற்கு குறைந்த கட்டணத்தில் அறை கள் வாடகைக்கு கிடைப்பதில்லை என்பது அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டுவரப்பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனிதநேய பண்பாட்டு விழுமியத்தை கடைப்பிடிக்கும் நம்மு டைய அரசு இந்த குறையை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில், வேலூர் அருகே சத்துவாச்சாரி உள்வட்டத்தில் உள்ள பெருமுகை என்ற கிராமத்திலே 2 ஹெக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 250 படுக்கை வசதிகள் கொண்ட கருணாநிதி நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் என்று முதலமைச்சர் பேசினார்.