ஆர் டி,ஓ செக் போஸ்ட்டுகளில் நாளுக்கு ஒரு கோடி லஞ்சம்! இழுத்து மூட கோரிக்கை!!

ஜி.கே.சேகரன்,
தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் - எல்லைகளில் உள்ள ஆர் டி,ஓ சேக் போஸ்ட்டுகளில் மாதத்திற்கு ஒரு கோடி லஞ்சம் பெறுகிறார்கள் எனவே அதனை முழுமையாக தமிழக அரசு மூட வேண்டும் - அகில இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா வேலூரில் பேட்டிஸ
வேலூர் மாவட்டம், வேலூரில் மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி,கே சிங் அவர்களை அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நேரில் சந்தித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து மனுவினை அளித்தார் உடன் மாவட்டத்தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் பலர் இருந்தனர்
பின்னர் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அகில இந்திய அளவில் பிஜேபி ஆளும் மாநிலங்களில் 10 ரூபாய் டீசல் விலை குறைவாக உள்ளது ஆனால் ஆந்திராவில் கேரளாவில் குறைவாக உள்ளது பல இடங்களில் குறை சொல்லும் அரசாங்கள் ஏன் டீசல் விலையை குறைக்கவில்லை.
மத்திய அரசு மீதும், மக்கள் மீதும் மாநில அரசுகள் போர் தொடுக்கிறது தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் ஸ்டாலின் டீசல் விலையை குறைப்பதாக கூறினார் ஆனால் குறைக்கவில்லை இதனால் லாரி உரிமையாளர்கள் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவிலேயே குறிப்பாக லாரிகள் அதிகம் இயங்குவது தமிழகத்தில் தான், ஆனால் நாங்கள் வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளோம்.
டீசல் விலையை குறைக்காதது மன குறையாக உள்ளது. தமிழக அரசு டீசல் விலையை குறைக்காததால் ஒரு நாளைக்கு ரூ.2. 50 கோடி வரையில் இழப்பு ஏற்படுகிறது. அதனை முதல்வர் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
அடுத்ததாக 1925 செக் போஸ்ட்டுகளை மத்திய அரசு அகற்றியது அதே போல் பாஜக ஆளும் பல மாநிலங்களில் ஆர் டி.ஓ சோதனை சாவடிகள் இல்லை ஆனால் தமிழகத்தில் பாடர் ஆர்டி.ஓ சேக் போஸ்ட்டுகளில் ஒரு நாளைக்கு ரூ.1 கோடிக்கு மேலாக லஞ்சம் பெறப்படுகிறது.
இதற்கான அவசியம் என்ன ஓசூர் செக் போஸ்ட் சென்னை சுற்றி 3 செக் போஸ்ட்கள் லஞ்சம் வசூலிக்கும் ஏடிஎம் மெஷின் போல் உள்ளது.
இதில் முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும் பல மாநிலங்களில் இதனை ரத்து செய்துவிட்டனர் ஆனால் தமிழகத்தில் பல கோடி ஊழல் நடக்கிறது.
மத்திய அரசு மோட்டார் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை வரவேற்கிறோம்.
அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக புரள்கிறது இதற்கு காரணம் என்ன? அதிக அளவு மக்களும் இதனால் விபத்தில் இறக்கின்றனர் இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது இதற்கு முன்னர் இருந்த அரசாங்கம் கொள்ளையடித்தது ஆனால் இந்த அரசாங்கம் செய்யும் வேலை என்ன லாரி ஸ்டிக்கரை 11 கம்பெனிகளிடமிருந்து வாங்கி ஒட்டலாம் என இந்தியாவில் அமலில் உள்ளது ஆனால் அது தமிழ்நாட்டில் இல்லை.
2 கம்பெனி ஸ்டிக்கரை மட்டும் உபயோகிக்க வேண்டும் என்பது நியாயமில்லை இதனால் மாநில அரசுக்கு என்ன பிரச்சனை?
இது போல் பல சிக்கல்கள் உள்ளது சுங்கச்சாவடிகள் பெங்களூர் -சென்னை சாலையில் ஒரு நாளைக்கு ரூ.2. 50 கோடி சுங்கம் வசூலாகிறது, வருடத்திற்கு 840 கொள்ளையடிக்கின்றனர் இதனை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
பிஜேபி அரசும் காலவதியான சுங்கசாவடியை எடுக்கவில்லை உடனடியாக தமிழகத்தில் உள்ள காலவதியான சுங்கசாவடியை அகற்றுவதாக தமிழக முதல்வர் சூளுரைத்தார் ஆனால் செய்யவில்லை.
உடனடியாக தமிழக முதல்வர் மத்திய அரசிடம் பேசி காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் வாழ்வா சாவா என்ற நிலையில் போராடி வரும் வேலையில் பல மாநிலங்களில் விவசாய பொருட்களுக்கு விலக்கு அளிக்கின்றனர் நெல் கரும்பு கோதுமை லாரிகளுக்கு அதை போல் தமிழகத்திலும் உள்ள அனைத்து சுங்கசாவடிகளிலும் விவசாயி பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் காலி லாரிகளுக்கும் சுங்க விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார்.