தி.மு.க. வில் கட்சி கொடி பிடிக்காதவர்களுக்கு மண்டல பதவி:-தேர்தலில் பங்கேற்ற மூத்த உறுப்பினர் வேதனை!

ஜி.கே.சேகரன்,
மாநகராட்சியில் மண்டல குழு தலைவர் தேர்தலில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து வேட்பு மனுவைதாக்கல் செய்த ஆர்.பி.ஏழுமலை என்பவரின் மனு ஏற்பட்டதாக அறிவித்து பின்னர் காலதாமதப்படுத்தி தேர்தலே நடத்தாமல் அவரின் மனு தள்ளுபடி செய்ததாக அறிவித்தார் ஆணையர். இதனால் கூச்சல் குழப்பம் 15-க்கு 11 கவுன் சிலர்களுடன் உள்ளிருந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஏழுமலை. தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என குற்றச்சாட்டு திமுகவில் மூத்த நிர்வாகிகளை மதிப்பதே கிடையாது பணத்திற்கு தான் மதிப்பு என கூறிவிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம்,வேலூர் மாநகராட்சியின் 4 மண்டல குழுதலைவர்களுக்கான தேர்தல் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் முதலில் ஒன்றாவது மண்டல குழுவுக்கு புஷ்பலதா வன்னியராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது மண்டலத்திற்கு தேர்தல் நடத்துவதற்கு ஆணையர் அசோக்குமார் அனைத்து கவுன் சிலர்களையும் உள்ளே அழைத்தார். அப்போது திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் நரேந்திரனை எதிர்த்து திமுக மூத்த நிர்வாகி மாவட்டதுணை செயலாளர் ஏழுமலை என்பவர் மண்டல குழு தலைவருக்கு வேட்பு மனுதாக்கல் செய்தார்.
இதனால் திமுகவினரிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.
ஆணையர் முதலில் இருமனுவை ஏற்பதாக கூறிவிட்டு, பின்னர் தேர்தலை ஒரு மணிநேரம் கழித்து தேர்தல் நடத்துவதாக கூறிவிட்டார்.
தொடர்ந்து, மூன்றாவது மண்டலத்திற்கு அதிமுகவை சேர்ந்தவர் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
இதில் திமுகவை யூசூப் கான் 11 ஓட்டுகளை பெற்று வெற்றிபெற்றார்.
அதன் பின்னர் 4ஆவது மண்டல குழ்தலைவராக திமுகவை சேர்ந்த வெங்கடேசன் போட்டின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் மீண்டும் 2 ஆவது மண்டலத்திற்கு தேர்தல் நடத்துவதாக அணைவரையும் உள்ளே அழைத்தனர்.
ஆனால் தேர்தலை நடத்தாமல், ஆணையர் ஏழுமலையின் வேட்புமனுவை தள்ளுபடி செய்வதாகவும் நரேந்திரன் வெற்றி பெற்றதாக தன்னிச்சையாக அறிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
இதில் ஏழுமலைக்கு ஆதரவாக 11 கவுன்சிலர்களும் நரேந்திரன் 4 கவுன் சிலர்கள் ஆதரவு இருந்ததால் ஆணையர் இம்முடிவை எடுத்தார் இதுகுறித்து காரணம் கேட்டதற்கு ஆணையர் அசோக்குமார் ஏழுமலை வார்டு தவறுதலாக ஏழுதியதாக வேட்புமனுவை தள்ளுபடி செய்ததாக கூறி சென்றார்.
இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகி ஏழுமலையிடம் கேட்ட போது தேர்தலை நியாயமாக நடத்தவில்லை பணம் பெற்றுகொண்டு இவ்வாறு அதிகாரிகள் செயல்படுகின்றனர் திமுகவில் மூத்த நிர்வாகிகள் மதிப்பதில்லை கட்சியின் கொடியை கூட பிடிக்காதவர்களுக்கு பதவி கிடைக்கிறது இந்த தேர்தலில் நான் இரண்டரை கோடி பணம் செலவு செய்தேன், இங்கு நடப்பது அநியாயம் என பேசினார்.
இவ்வளவு கலேபாரத்திற்கு இடையே சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் ஆகியோர் மூன்று மண்டல தலைவர்களை அறிமுகப்படுத்தினார் இதில் ஒன்றாவது மண்டல தலைவராக தேர்வு செய்யப்பட்ட புஷ்பலதா வன்னியராஜா கலந்துகொள்ளவில்லை.