ஏழைகளின் குடியிருப்புகள் ஜே.சி.பி.மூலம் தரை மட்டம்!

ஏழைகளின் குடியிருப்புகள் ஜே.சி.பி.மூலம் தரை மட்டம்!

  கு.அசோக்,

 உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆற்று பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் பலத்த பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது

 இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட சாதிக்பாட்ஷா நகர் பகுதியில் 340 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இந்த குடியுருப்புகள் ஆற்று பகுதியில் ஒட்டி அமைந்துள்ளதால் அதனை அகற்ற உயர் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

 இதனை தொடர்ந்து 340 குடியிருப்புகளையும் இடிக்கும் பணி இன்று தொடங்கியது.

 ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி மற்றும் டி.எஸ்.பி பிரபு தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன.

 முன்னதாக வீடுகளை இழக்கும் மக்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதில் அரசின் சார்பில் இலவச வீடு கட்டி தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

  அதுவரைக்கும் அவர்கள் எங்கு தங்குவார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது.