டோல்கேட் பெண் ஊழியரை தாக்கி மானபங்கப்படுதிய திமுக நிர்வாகி கைது!

ஜானி,
தலைவாசல் அருகே டோல்கேட்டில் பணிபுரியும் பெண் ஊழியரை மானபடுத்திய விவகாரத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நத்தக்கரை பகுதியில் சுங்கச் சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சுங்கச்சாவடியை கடக்க முயன்ற காரை கேட் போட்டு நிறூத்திய பெண் ஊழியர் நிர்மலாதேவி என்பவர் நிறுத்தி
டோல் கட்டணம் கேட்டுள்ளார்.
அப்போது, காரில் இருந்தவர்கள் தங்களை திமுகவினர் என்று கூறி, கட்டணம் செலுத்த மாட்டோம் என தெரிவித்து உள்ளனர்.
இதனால், ஊழியர் நிர்மலாதேவி, அந்த காரை அனுப்ப மறுத்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தலைவாசல் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் நிவாஸ் என்பவர், கேட்டை திறந்து வாகனங்களை அனுப்பி உள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர் நிர்மலா தேவியை அவர் கடுமையாக தாக்கி, மானபங்கம் செய்தார்.
இதில் காயமடைந்த நிர்மலாதேவியை, சக ஊழியர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து நிர்மலாதேவி அளித்த புகாரின் பேரில், தலைவாசல் போலீசார், திமுக இளைஞரணி நிர்வாகி நிவாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் நிவாஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆளுங்கட்சியினர் என்று பாராமல் உரிய நடவடிக்கை எடுத்த தலைவாசல் போலிசாரை டோல்கேட் ஊழியர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.