கள்ளக்காதலால் கொலையா?

கள்ளக்காதலால் கொலையா?

   கு.அசோக்,

  நாட்றம்பள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் கழுத்து நெரிக்கப்பட்டு ஒருவர் கொலை.

   திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட வெலக்கல் நத்தம் அடுத்த எம்ஜிஆர் நகர் கொல்லை பகுதியில் கழுத்து நெரித்து ஒருவர்  கொல்லப்பட்டார்.

   நாட்றம்பள்ளி தாலுக்கா வெலக்கல் நத்தம் அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிப்பவர் சாமி பிள்ளை என்பவரின் மகன் அன்பழகன்(45) இவரது மனைவி சரிதா(40) இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

   இதில் முதல் இரண்டு ஆண் பிள்ளைகள் சிங்கப்பூரில் வேலை செய்துவரும் நிலையில் ஜேசிபி ஓட்டுனராக இருக்கும் கடைசி மகன் இளவரசு(21) ஆகியோர் சேர்ந்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர்.

   சரிதா தன் கணவன் மீது உள்ள சந்தேகத்தினால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

   அதனால் அன்பழகன்  வீட்டிலிருந்து கோபித்துக்கொண்டு எம்ஜிஆர் நகர் அருகே கொல்லை பகுதியில்  தன்னுடைய நிலத்தில் உள்ள வீட்டில் கடந்த 6 மாதத்திற்கு முன்பிலிருந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

  இந்நிலையில் அன்பழகன் அவரது வீட்டில் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்.

   விரைந்து வந்த நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து  சடலத்தை   கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து பின்பு  சந்தேகத்தின் அடிப்படையில் மனைவி சரிதா மற்றும் மகன் இளவரசு ஆகிய இருவரையும்  அழைத்துச் சென்று கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.