போலி நிருபர்களும் சமூக விரோதிகளும் கூட்டு ஆக்கிரமிப்பு!அரை மொட்டையுடன் புகார்!

போலி நிருபர்களும் சமூக விரோதிகளும் கூட்டு ஆக்கிரமிப்பு!அரை மொட்டையுடன் புகார்!

  கு.அசோக்,

   அரை மொட்டை அடித்த்துக்கொண்டு செருப்பு மாலை அணிந்து ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனுவை கொடுக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

   இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர் நிலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் அவற்றை பாதுகாக்கும் வகையில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதே ஊரை சேர்ந்த முத்தரசன் என்பவர் போர் கொடி தூக்கியிருக்கிறார்.

 அதற்காக அவர் செருப்பு மாலை அணிந்தும் நெற்றியில் நாமம் இட்டபடி அரை மொட்டையுடன் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த்துக்கு சென்று கோரிக்கை மனுவை வழங்கினார்.

   அவர் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, விளாப்பாக்கம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஏரிகள் 14 குழுக்கள் மற்றும் பல நீர் வழிப்பாதைகள் அரசு ஊழியர்கள் போலி நிருபர்கள் மற்றும் சில சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கு உடந்தையாக கையூட்டு பெற்றுக் கொண்டு விளாப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் விளாப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் திமிரி வருவாய் அலுவலர் மற்றும் ஆற்காடு வட்டாட்சியர் உட்பட பல அரசு அதிகாரிகள் இதில் உடந்தையாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

 எனவே நேற்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் முத்தரசன் மேற்படி மனு அளித்தார்.