மகளுடைய காதலன் வீடு சினிமா பாணியில் துவம்சம்! பரபரப்பு!

க.பாலகுரு,
மகளுடைய காதலன் வீடு சினிமா பாணியில் துவம்சம் செய்த விவகாரம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காதலிக்கு நிச்சயதார்தம் நடக்க இருந்ததை அறிந்த காதலன் தனது காதலியுடன் தலைமறைவு : ஆத்திரம்
அடைந்த பெண் தரப்பினர் காதலன் வீட்டை சூரையாடி,கத்திகுத்து இருவர் மருத்துமனையில் அனுமதி. தான் தாலிகட்டிய மனைவிக்கு மீண்டும் கல்யாணமா என ஆவேசம் அடைந்த கணவன் தனது மனைவியை அழைத்துகொண்டுதலைமறைவான சம்பவத்தை அடுத்து இருதரப்பினரிடையே மோதல் உருவாகி வீடு சூரையாடப்பட்டு ஒருவரை ஒருவர்கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் வடபாதிமங்கலம் அருகேபெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம்,வடபாதிமங்கலம் அருகே உள்ள கீழகொத்தூர் வடக்குதெருவை சேர்ந்த ரவியின் மகன் தினேஷ்(20) இவர் ஜேசிபிஆப்ரேட்டராக இருந்து வருகிறார் தினேஷ் அதே பகுதியைசேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் புவனேஸ்வரியை காதலித்துவந்த நிலையில், க
டந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனை அறியாமல் ரமேஷ் தனதுமகள் புவனேஸ்வரிக்கு மாப்பிள்ளையினை தேர்வு செய்து சிலதினங்களில் நிச்சயதார்த்தம் நடத்திட முடிவெடுத்துள்ளார்.
இதனை தனது காதலி புவனேஸ்வரி மூலம் அறிந்த தினேஷ்இருவரும் சேர்ந்து வீட்டை விட்டு ஓடி தலைமறைவாகி இருந்து வந்தனர் இந்நிலையில் தனது மகளை தினேஷ் திருமணம்செய்துகொண்டு தலைமறைவான செய்தியை அறிந்த புவனேஸ்வரியின் அப்பா ரமேஷ் அவரது மகன் ஆகியோர்ஆத்திரம் அடைந்து தனது உறவினர் மற்றும் நண்பர்களுடன் 20க்கும் மேற்பட்டோர் தினேஷ் வீட்டுக்கு சென்று ரகளையில்ஈடுபட்டனர்.
அப்போது தினேஷ் வீட்டில் இருந்த டிவியைஅடித்து நொறுக்கியதோடு பீரோவில் இருந்து பொருட்களையும் தீயிட்டு கொளுத்தி மற்ற பொருட்களையும்அடித்து நொறுக்கினர்.
அப்போது இரு தரப்பினரும்ஒருவரைக்கொருவர் கொலைவெறியுடன் கத்தியால் மாறிமாறி குத்திகொண்டனர்; கத்தி குத்தில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரியின் சகோதரர் தினேஷ் மற்றும் தினேஷின்சகோதரர் விக்னேஸ் ஆகிய இருவரும் திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டனர். இதில் புவனேஸ்வரியின் சகோதரர்தினேஷ் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில்பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகவடபாதிமங்கலம் காவல்துறையினர் 5 பேர் மீது வழக்குபதிவுசெய்து கைது செய்துள்ளனர்
காதலர்கள் தினேஷ் புவனேஸ்வரியி ,மற்றும் அவரது தாய்தந்தை ஆகியோர் தலைமறைவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.