மூன்றாண்டுகளில் 12 கோடி வரையில் மோசடி! வெறும் ஆர்பட்டம் போதுமா?

மூன்றாண்டுகளில் 12 கோடி வரையில் மோசடி! வெறும் ஆர்பட்டம் போதுமா?

G.K.Sekaran,

வேலூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரியும் அரசு நிர்ணயித்த கூலியை வழங்கிட கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

 வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

 பொதுசெயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற இதனை மாநில செயலாளர் பாரதிதாசன் துவங்கி வைத்தார். மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் குப்பை தரம் பிரிப்போர் நுன்னுயிர் பூச்சிகளை அழிக்கும் தொழிலாளர்கள் இவர்களுக்கு அரசு அறிவித்த கூலியை வழங்க வேண்டும் மேலும் இஎஸ்.ஐ ,பி.எப் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவ திட்டத்திற்கும் பணத்தை தொழிலாளர்களிடம் பணத்தை பிடித்தம் செய்கின்றனர்.

   அதனை முறைப்படி கட்டாமல் சுமார் 6 கோடி வரையில் மோசடி செய்துள்ளனர் உடனடியாக அந்த பணத்தை கட்ட வேண்டும்.

  கூலியை குறைத்து கொடுத்து அதன் மூலம் மூன்றாண்டுகளில் 12 கோடி வரையில் மோசடி நடந்துள்ளது அந்த பணத்தை தொழிலாளர்களிடம் மீண்டும் வழங்க வேண்டும், குப்பைகளை சேகரிக்க கை வண்டிகளுக்கு பதிலாக பேட்டரி வாகனங்களை வழங்க வேண்டும், தூய்மை தொழிலாளர்கள் ஒப்பந்தங்கள் மூலம் வழங்கப்படும் கூலியினை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் மீண்டும்  நேரடியாக செலுத்த வேண்டும், மேலும் சுற்றுசூழல்களில் மாசு ஏற்படுத்தி குப்பைகளை ஆற்றில் கொட்டுவதை தடை செய்ய வேண்டும்.

  மேலும் தொழிலாளர்களுக்கு முகக்கவசம் கையுறை காலணி போன்ற உபகரணங்களை வழங்கி பணி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓராண்டாகியும் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிகொடை வழங்காமல் உள்ளதை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் திரளான தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

  இவ்வளவு பெரிய மோசடிக்கு வெறும் ஆர்ப்பாட்டம் போதுமா அல்லது சட்டத்தையும் நாடுவார்களா? என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.