பட்ட பகலில் பஜாரில் கொள்ளை!

கு.அசோக்,
வாணியம்பாடியில் குடிநீரை சுத்திகரிக்கும் கடையில் திடீரென நுழைந்த 4 பேர் கடையிலிருந்து செல்போனை கொள்ளையடித்து இரண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சி.சி. டிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் வள்ளிப்பட்டு சேர்ந்த காமராஜ் என்பவர் குடிநீரை சுத்திகரிக்கும் வாட்டர் பியூரிஃபையர் கடை நடத்தி வருகிறார்.
இவர் வெளியில் சென்று விட்டு இருந்த நிலையில் அவரது உறவினர் நித்திஷ் என்பவர் கடையில் இருந்தபோது திடீரென இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்களில் இருவர் கடைக்குள் நுழைந்து பொருட்களை விலை கேட்பது போல் கேட்டு நித்திசை திசை திருப்பி மேஜை மேல் இருந்த செல்போனை எடுத்து கொண்டு தப்பினர்.
இருசக்கர வாகனங்களில் தப்பிய அவர்கள் மீது நிதிஷ் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி செல்போனை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
வாணியம்பாடி வணிக வளாகங்கள் அதிகமாக உள்ள இடத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.