பதற வைக்கும் கொலை:- 4 பேர் கைது!மூவருக்கு வலைவீச்சு!!

பதற வைக்கும் கொலை:- 4 பேர் கைது!மூவருக்கு வலைவீச்சு!!

  ஜி.கே.சேகரன்,

 சோளிங்கர் அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட  வழக்கில் 4 பேர் கைது.தலைமறைவான மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

  இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில்  திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஒன்றியம் ஐயனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் வயது 22. இவர் தனது மாமனார் உமாபதி என்பவருடன்  இரவு தனது பைக்குக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றனர். அப்போது கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த பத்துக்கும் மேற்பட்டோர் திடிரென பைக்கில் இருந்த சரத்குமார் மற்றும் அவரது மாமனார் உமாபதியை சரமாரியாக தாக்கியதோடு சரத்குமாரை பைக்கில் கடத்திச் சென்று கூடலூர் அருகே உள்ள ஒரு மறைவான இடத்தில் சரத்குமாரை வெறித்தனமாக தாக்கி விட்டு மர்ம கும்பல் தட்டி சென்றது.

  அதிர்ச்சி அடைந்த உமாபதி தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் உறவினர்கள் விரைந்து சென்று படுகாயம் அடைந்து கிடந்த சரத்குமாரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

   இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை தாக்கிய மர்ம கும்பலை தேடி வந்தனர்.இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்குமார் சிகிச்சை பலனின்றி  நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்தார். இதையடுத்து சோளிங்கர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர்.

  இதுகுறித்து அரக்கோணம் ஏஎஸ்பி கிரிஷ் யாதவ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து சோளிங்கர் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ், ரவி, ராஜேந்திரன்,தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில்  தலைமறைவாக இருந்த ஐப்பேடு பகுதியை சேர்ந்த அசோக்ப்பாண்டியன் (24), துரைப்பாண்டியன் (23), தாமோதரன் (24), கோபி (24)  ஆகியோரை கைது செய்தனர் . மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

 அப்போது அவர்கள் முன்விரோதம் காரணமாக சரத்குமாரை அடித்தாக தெரிவித்தனர். சம்பவத்தன்று பயன்படுத்திய ஒரு  இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலிசார் கைது செய்யப்பட்ட 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.