பட்டியலின சிறுவர்களுக்கு தீண்டாமை ஏற்படுத்திய ஐவரை ஊரைவிட்டு விலக்கிய நீதிமன்றம்!

சபரி.ஈஸ்வரன்,
பட்டியலின சிறுவர்களுக்கு தீண்டாமை கொடுமை ஏற்படுத்திய ஐந்து நபர்களை, காவல் துறையின் அறிக்கையின் பெயரில் 6 மாதங்களுக்கு ஊரைவிட்டு விலக்கிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இது பற்றின விவரம் வருமாறு,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் ஒன்றில் பட்டியலின சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம் தொடர்பாக கடை உரிமையாளரான மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், அவர்கள் 5 பேரும் 20-ந்தேதி முதல் சம்பந்தப்பட்ட பாஞ்சாகுளம் ஊருக்குள் 6 மாத காலத்திற்கு நுழைய தடை விதித்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பான அறிக்கை சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நெல்லை மாவட்ட தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பத்மநாபன், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 5 பேரும், 6 மாதம் ஊருக்குள் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு தென்மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.