ஊருக்குள் முதலைகள்! பொது மக்கள் கிலி!! அரசு அதிகாரிகள் குழப்பம்!!

தி.லூக்காஸ்,
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் விவசாய பயன்பாட்டிற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போது, பல முதலைகள் தப்பிச் சென்று ஆற்றுப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. திருப்பூர் கல்லாபுரம், மடத்துக்குளம், கடத்தூர், கண்ணாடிப்புத்தூர் ஆகிய இடங்களில் கரைகள் மற்றும் பாறைகளின் மீது முதலைகளை அடிக்கடி காண முடிகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீர் குறையாததால், முதலைகளை பிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமராவதி ஆற்றுப்பாலத்தின் மீதிருந்து ஆற்றில் உலா வரும் முதலைகளை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் இதை வேடிக்கை காண மக்கள் கூடுவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒரு பக்கம் போலிசார், மறூபக்கம் தீயணைப்பு துறையினர், இவர்களுக்கு இடையே வனத்துறையினர் என மண்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் மாவட்ட நிர்வாகம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது.