5 டன் போதை பொருட்களை மடக்கிய வேலூர் டிஎஸ்பி!

ஜி.கே.சேகரன்,
சுமார் 5 டன் எடையுடைய ரூ. 50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் கடத்தலுக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரி பறிமுதல் பள்ளிகொண்டா டிஎஸ்பி நடவடிக்கை
வேலூர் அடுத்த பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் போலிசார், வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு உத்தரவின் பேரில் பள்ளி கொண்டா அடுத்துள்ள கொத்த மங்கலம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதனை அடுத்து அப்பகுதியில் வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர் அரிசி மூட்டையை போல் பேக் செய்திருந்த மூட்டைகளை பிரித்து பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் முழுவதும் போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 5 டன் எடையுடைய ரூ.50 லட்சம் மதிப்புள்ள குட்கா பான் மசாலா ஆகியவை இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து கண்டெய்னர் லாரியை பள்ளிகொண்டா போலீசார் பறிமுதல் செய்தனர்.