திருட்டு பொருட்களை விற்க - வாங்குவதில் சண்டை! வீடியோவால் டென்ஷனான போலிஸ்!
ஆர்.ராஜேஷ்குமார்,
சென்னை அண்ணாநகர் 11-வது மெயின் ரோட்டில் உள்ள பழைய பேப்பர் கடைக்கு (காயலான் கடை) வந்த சிலர், அங்கு கடையிலிருந்த உரிமையாளரிடமும், அவருடன் இருந்தவரிடமும் பணம் பற்றி கணக்கு கேட்டனர்.
அவர்கள் இந்த காயலான் கடையில் ஏதோ திருட்டு பொருட்களை விற்றுள்ளனர். அதற்கு அந்த உரிமையாளர் கணக்கு குளறுபடி குறித்து பேசினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், யேரோ ஒரு ரவுடிக்கு போன் போட்டனர்.
உடனடியாக அங்கு பைக்கில் வந்த ஒரு ஹெல்மெட் தாதா, காயலான் கடையில் நின்றுக் கொண்டிருந்தவரை சரமாரியாக தாக்கினார். அவருடன் ஏற்கனவே அங்கிருந்த ரவுடிகளும் சேர்ந்து கம்பு, இரும்பு ராடு மற்றும் கிடைத்த பொருட்களை கொண்டு அந்த நபரை தாக்கினர்.
சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான நிலையில் அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.
இது குறித்து டென்ஷனான போலிசார் வீடியோ ஆதாரங்களை வைத்து விசாரித்து வருகிறார்கள்.