விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற அலுவலர் கைது!!

விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற அலுவலர் கைது!!

 கண்ணன்,

 இலவச மினிணைப்பு வழங்குவதற்காக விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற  மின் வாரிய அலுவலர்  லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இது பற்றின விவரம் வருமாறு,

  மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னமங்கலம் அருகே உள்ள முத்தையாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் காட்டு ராஜா என்பவர் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்திருந்தார்.

  இதற்காக அரசுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில் முதற்கட்டமாக 500 ரூபாயை செலுத்தியிருந்தார்.

 இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி இலவச மின்சாரம் காட்டு ராஜாவிற்கு அரசாணை வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய அலுவலரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அரசுக்கு ரூபாய் 24 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் தனக்கு ரூபாய் 25,000 பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி காட்டு ராஜா, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி ரூபாய் 20 ஆயிரம் ரசாயனம் தடவிய நோட்டுகளையும், அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செக்காகவும் உதவி மின் பொறியாளர் முகமது உவைஸிடம் கொடுத்துள்ளார்.

 அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக உள்ளே நுழைந்து கையும் களவுமாக பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.