வாகன சோதனை செய்த எஸ்.ஐ.க்கு ராடு அடி!

ஜி.சாந்தகுமார்,
சென்னை, அயனாவரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த எஸ்.ஐ. சங்கர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வாக தணிக்கை பணியில் மேற்படி எஸ். ஐ. ஈடுபட்ட்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இது பற்றி கூறப்படுவதாவது,
ஒரு மோட்டார் பைக்கில் மூன்று பேர் வேகமாக வந்தனர்.
அந்த வண்டியை எஸ். ஐ, நிறுத்துமாறு சைகை காட்டினார்.
ஆனால் அவர்கள் வேகமாக மோதுவதைப்போல் வந்து பின்னர் நிறுத்தினர்.
பின்னர் அதிலிருந்து இறங்கிய அவர்கள், எங்களை எதற்காக தடுக்கிறாய் என்று கேட்டு, அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு எஸ்கேப் ஆனார்கள்.
இதில் காயமடைந்த எஸ்.ஐ. சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.