தோடா....பிரதமர் கூட்டத்துக்கே அனுமதியில்லையா?

தோடா....பிரதமர் கூட்டத்துக்கே அனுமதியில்லையா?

 மே.லம்பாரங்,

 பிரதமர் பங்கேற்கும் அரசியல் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், எங்களுக்கேவா என்று பாஜக கெத்து காட்ட முயன்றுள்ளது.

 பா.ஜ.க. மேகாலயாவில் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது.

 அந்த வகையில் பிப்ரவரி 24-ம் தேதியன்று பாஜகவை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய  துரா பகுதியில் பி.ஏ.சங்மா அரங்கில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்கப்பட்டது.

 ஆனால் பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

 துரா பகுதியில் பி.ஏ.சங்மா அரங்கில் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அதனை சுட்டிக்காட்டி பிரசார கூட்டத்துக்கு மேகாலயா அரசு அனுமதி மறுத்துள்ளது.

  இதையடுத்து, மேகாலயா பாஜக நிர்வாகிகள் கூறுகையில், எங்களுக்கே அனுமதியில்லையா? பார்த்துக்கலாம் ஒரு கை! கடந்த மாதமே அந்த இடம் திறக்கப்பட்டு விட்ட நிலையில் எங்களுடைய வெற்றியை பறிக்கும் வகையில் இப்படி செய்கிறார்கள்.

மேகாலயா முழுவதிலும் மோடி அலை வீசுவதால் பயந்துவிட்டனர்.

பிப்ரவரி 24 பிரதமர் மோடி பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. மாற்று இடத்தில் பிரச்சார கூட்டம் நடந்தே தீரும் என்று கெத்து காட்டியிருக்கிறார்கள்.